மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) செயற்பாட்டாளர்களான சமந்த வித்தியாரத்ன மற்றும் நாமல் கருணாரத்ன ஆகிய இருவரும் பொலிஸில் சரணடைந்தனர்.
அதன்பின்னர், அவ்விருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜூலை 1ஆம் திகதியன்று பொரலந்த பகுதியில் இடம்பெற்ற, விவசாய ஆர்ப்பாட்டம் தொடர்பிலேயே அவ்விருவருக்கும் நோட்டீஸ் அனுப்பிவைக்கப்பட்டிருந்தது.
தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறி, பெருந்திரளான மக்களை ஒன்றுதிரட்டி, எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என்றக் குற்றச்சாட்டின் கீழே இவ்விருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.