Date:

பேரூந்து கட்டணத்திலும் மாற்றமா??

டீசல் மானியம் கிடைக்காவிட்டால், பேரூந்து கட்டணத்தை 15 சதவீதத்தினால் அதிகரிக்க வேண்டி ஏற்படும் என தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ண தெரிவித்துள்ளார்.

இதேவேளை, டீசல் மானியம் கிடைக்காவிட்டால், தமது சங்கத்தினால், பேரூந்து கட்டணத்தை 30 சதவீதத்தினால் அதிகரிக்க வேண்டி ஏற்படும் என அகில இலங்கை பேருந்து உரிமையாளர் சங்க சம்மேளத்தின் பிரதான செயலாளர் அஞ்ஜன ப்ரியன்ஜித் தெரிவித்துள்ளார்.

இதன்படி, 121 ரூபா என்ற பழைய விலைக்கு டீசலை வழங்குவதுடன், குறுந்தூர சேவையில் ஈடுபடும் பேரூந்துகளுக்கு 100 லீற்றர் டீசலும், நெடுந்தூர சேவையில் ஈடுபடும் பேரூந்துகளுக்கு 200 லீற்றர் டீசலும் வழங்கினால், பேரூந்துக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய அவசியமில்லை.

டீசலின் விலை 55 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளமையால், ஆகக்குறைந்த கட்டணம் 25 முதல் 30 ரூபா வரையில் இருக்க வேண்டும்.

ஏனைய கட்டணங்கள், 30 சதவீதத்தில் அதிகரிக்க வேண்டும் என்பது தங்களின் யோசனையாகும் என அகில இலங்கை பேரூந்து உரிமையாளர் சங்க சம்மேளத்தின் பிரதான செயலாளர் அஞ்ஜன ப்ரியன்ஜித் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சிறி தலதா வழிபாடு’ – இன்று 2வது நாள்

சிறி தலதா வழிபாடு’ இரண்டாவது நாளாக இன்று (19) மதியம் ஆரம்பிக்கப்படவுள்ளது.   அதன்படி,...

மனம்பிடிய துப்பாக்கி சூடு – காரணம் வெளியானது

மனம்பிடிய ஆயுர்வேத பிரதேசத்தில் அமைந்துள்ள ‘ஜீவமான் கிறிஸ்து தேவாலயம்’ என்ற புனித...

மன்னம்பிட்டியவில் துப்பாக்கிச் சூடு

மன்னம்பிட்டியவில் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.   இந்த துப்பாக்கிச்சூட்டில் யாருக்கும் பாதிப்பு இல்லை...

அதிரடியாக பிள்ளையானின் சாரதியும் கைது

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையானின் சாரதியை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் இன்று கைது...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373