Date:

பேரூந்து கட்டணத்திலும் மாற்றமா??

டீசல் மானியம் கிடைக்காவிட்டால், பேரூந்து கட்டணத்தை 15 சதவீதத்தினால் அதிகரிக்க வேண்டி ஏற்படும் என தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ண தெரிவித்துள்ளார்.

இதேவேளை, டீசல் மானியம் கிடைக்காவிட்டால், தமது சங்கத்தினால், பேரூந்து கட்டணத்தை 30 சதவீதத்தினால் அதிகரிக்க வேண்டி ஏற்படும் என அகில இலங்கை பேருந்து உரிமையாளர் சங்க சம்மேளத்தின் பிரதான செயலாளர் அஞ்ஜன ப்ரியன்ஜித் தெரிவித்துள்ளார்.

இதன்படி, 121 ரூபா என்ற பழைய விலைக்கு டீசலை வழங்குவதுடன், குறுந்தூர சேவையில் ஈடுபடும் பேரூந்துகளுக்கு 100 லீற்றர் டீசலும், நெடுந்தூர சேவையில் ஈடுபடும் பேரூந்துகளுக்கு 200 லீற்றர் டீசலும் வழங்கினால், பேரூந்துக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய அவசியமில்லை.

டீசலின் விலை 55 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளமையால், ஆகக்குறைந்த கட்டணம் 25 முதல் 30 ரூபா வரையில் இருக்க வேண்டும்.

ஏனைய கட்டணங்கள், 30 சதவீதத்தில் அதிகரிக்க வேண்டும் என்பது தங்களின் யோசனையாகும் என அகில இலங்கை பேரூந்து உரிமையாளர் சங்க சம்மேளத்தின் பிரதான செயலாளர் அஞ்ஜன ப்ரியன்ஜித் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கொழும்பு மாநகர சபை மீது கோபா பாய்ந்தது

கொழும்பு நகரில் நிலுவையில் உள்ள மதிப்பீட்டு வரியை வசூலிப்பதற்குப் பொருத்தமான பொறிமுறையொன்றைத்...

மோட்டார் போக்குவரத்து திணைக்களம் விசேட அறிவிப்பு

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் பணிகள் எவ்வித தடையுமின்றி இடம்பெற்று வருவதாக அத்திணைக்களம்...

சஷீந்திர ராஜபக்ஷவிற்கு பிணை

ஊழல் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் காவலில்...

கடலில் மிதந்து வந்த கொக்கேன் போதைப்பொருள் பொதிகள் கண்டுபிடிப்பு?

தெற்கு கடற்கரைக்கு அப்பால் கடலில், இலங்கை கடற்படையினரால் கொக்கேன் போதைப்பொருள் அடங்கியதாக...