டொலர் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக எதிர்வரும் நாட்களில் தொலைபேசி மற்றும் துணைக்கருவிகளின் விலைகளை 30 வீதத்தினால் அதிகரிக்கவுள்ளதாக இலங்கை தொலைபேசி இறக்குமதி மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, புதிய விலை மாற்றப்பட்டியலை தமது சங்கத்தின் www.ccva.lk என்ற இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அச்சங்கத்தின் தலைவர் சமித் சேனாரத்ன தெரிவித்துள்ளார்.