Date:

எதிர்வரும் ஏப்ரல் மாதம் நிறைவடையும் வரையில் அனல்மின் நிலையத்திற்கு அவசியமான நிலக்கரி கொண்டுவரப்பட உள்ளது-காமினி லொக்குகே

நுரைச்சோலை அனல்மின் நிலையத்திற்கு அவசியமான நிலக்கரி உரியவாறு நாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதென வலுசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

நுரைச்சோலை அனல்மின் உற்பத்தி நிலையம் ஊடாக தேசிய மின்சார கட்டமைப்புக்கு 900 மெகாவாட் மின்சாரம் கிடைக்கின்றது.

இந்தநிலையில், எதிர்வரும் ஏப்ரல் மாதம் நிறைவடையும் வரையில் அனல்மின் நிலையத்திற்கு அவசியமான நிலக்கரி, மேலும் 5 கப்பல்களின் மூலம் கொண்டுவரப்பட உள்ளதாக அமைச்சர் நேற்றைய தினம் நாடாளுமன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்றும் சுழற்சி முறையில் மின்வெட்டு

நாட்டில் இன்றைய தினமும் சுழற்சி முறையில் மின்துண்டிப்பை அமுலாக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி, A முதல் L  வரையான வலயங்களில், காலை 8 மணிமுதல் மாலை 6 மணிவரையான காலப்பகுதிக்குள்,  இரண்டரை மணிநேரம் மின்தடை அமுலாக்கப்படவுள்ளது.

அத்துடன், குறித்த வலயங்களில் மாலை 6 மணி தொடக்கம் இரவு 11 மணிவரையான காலப்பகுதியில், ஒரு மணித்தியாலமும், 15 நிமிடங்களும் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.

அதேநேரம், P முதல் W வரையான வலயங்களில், மாலை 5 மணிமுதல் இரவு 9 மணிவரையான காலப்பகுதிக்குள் ஒரு மணிநேரமும் மின்தடை அமுலாக்கப்பட உள்ளதென பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஐக்கிய அரபு அமீரகத்தின் இராஜாங்க அமைச்சர் இலங்கை விஜயம்

ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் இராஜாங்க அமைச்சர்...

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் உயிரிழப்பு

இன்று (4) காலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழந்தார். பலப்பிட்டிய...

City of Dreams இன் தீபாவளி கொண்டாட்டத்தை வண்ணமயமாக்கிய நியா சர்மாவின் வருகை

கொழும்பில் உள்ள மிகவும் ஆடம்பரமான NÜWA Sri Lanka-க்கு வருகை தந்த...

இலங்கையின் டிஜிட்டல் கல்வியில் முப்பெரும் சக்திகள்: அரசாங்கம், இளைஞர்கள் மற்றும் சமூக ஊடகங்கள்

இலங்கையின் டிஜிட்டல் கல்விமுறை தற்போது புதிய பரிமாணத்தை அடைந்துள்ளது. இன்றைய கற்றல்...