Date:

ரஷ்யாவுக்கு எதிராக விசா, மாஸ்டர்கார்டு அதிரடி

அமெரிக்காவைச் சேர்ந்த விசா மற்றும் மாஸ்டர்கார்ட் நிறுவனங்கள் ரஷ்யாவில் தமது செயற்பாடுகளை நிறுத்த முடிவு செய்துள்ளன.

யுக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை அடுத்து தனது செயல்பாடுகளை இடைநிறுத்துவதாகவும், ரஷ்யாவில் உள்ள தமது வாடிக்கையாளர்கள் மற்றும் பங்காளர்களுடனான அனைத்து வணிகங்களையும் இடைநிறுத்துவதாகவும் அந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இன்னும் சில நாட்களில், ரஷ்யாவினுள் வழங்கப்பட்ட விசா அட்டைகள் மூலம் முன்னெடுக்கப்படும் அனைத்து பரிவர்த்தனைகளும்  நாட்டிற்கு வெளியே செயற்படமாட்டாது என்றும் வெளிநாடுகளால் வழங்கப்படும் விசா அட்டைகள் ரஷ்யாவினுள் செயற்படமாட்டாது எனவும் விசா நிறுவனம் தெரிவித்துள்ளது.

விசாவின் பிரதம நிறைவேற்று அதிகாரி அல் கெலி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ரஷ்யா மிலேச்சத்தனமாக யுக்ரைன் மீது மேற்கொள்ளும் ஏற்றுக்கொள்ள முடியாத தாக்குதல்கள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.

அவ்வாறே, ரஷ்ய வங்கிகளால் வழங்கப்படும் மாஸ்டர்கார்ட்  அட்டைகளும் கொடுக்கல் வாங்கலின்போது அல்லது ஏ.டி.எம்.களில் தொழிற்படமாட்டாது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் உயிரிழப்பு

இன்று (4) காலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழந்தார். பலப்பிட்டிய...

City of Dreams இன் தீபாவளி கொண்டாட்டத்தை வண்ணமயமாக்கிய நியா சர்மாவின் வருகை

கொழும்பில் உள்ள மிகவும் ஆடம்பரமான NÜWA Sri Lanka-க்கு வருகை தந்த...

இலங்கையின் டிஜிட்டல் கல்வியில் முப்பெரும் சக்திகள்: அரசாங்கம், இளைஞர்கள் மற்றும் சமூக ஊடகங்கள்

இலங்கையின் டிஜிட்டல் கல்விமுறை தற்போது புதிய பரிமாணத்தை அடைந்துள்ளது. இன்றைய கற்றல்...

இராணுவ சிப்பாய் பலி: மூவர் ;படைப்பிரிவு… காயம்;

முல்லைத்தீவு, முள்ளியவெளியில் உள்ள 59வது படைப்பிரிவு முகாமில் கைவிடப்பட்ட கட்டிடத்தின் செங்கல்...