Date:

எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு காண்பது தொடர்பில் புதிய வலுசக்தி அமைச்சர்

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது, மின் உற்பத்திக்கு தேவையான எரிபொருள் தொடர்ச்சியாக வழங்கப்படும் என புதிய வலுசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு காண்பது தொடர்பில் அமைச்சின் அதிகாரிகளுடன் கலந்துரையாடவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், தற்போதைய எரிபொருள் நெருக்கடியினால், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இன்னும் நீண்ட வரிசைகளை காணக்கூடியதாக உள்ளது.

இதேவேளை, நேற்று ஹெம்மாதகம பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றிற்கு அருகில் நின்ற ஒருவர் வரிசையை பின்தொடராமல் முன்னோக்கிச் சென்றதன் காரணமாக மோதலொன்று இடம்பெற்றுள்ளது.

மேலும் பல பகுதிகளில் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாகவும் அறியப்படுகிறது.

ரயில்களுக்கான எரிபொருளை வழங்குவதற்கு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் உறுதியளித்துள்ளதாக தொடருந்து தொழிற்சங்க கூட்டமைப்பின் செயலாளர் நதீர மனோஜ் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நேற்று ஈரான், இன்று கத்தார், நாளை துருக்கி. நமது நீண்ட கை எல்லா இடங்களிலும் தாக்கும்

இஸ்ரேலிய எழுத்தாளன் ஒருவன், பின்வருமாறு எழுதியுள்ளதாக அரபு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. நேற்று...

எல்லயில் விபத்திற்குள்ளான பேருந்தின் உரிமையாளர் கைது

எல்ல - வெல்வாய வீதியில் விபத்துக்குள்ளான பேருந்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த...

நேபாள நிலைமை தொடர்பில் ரணில் விசேட அறிக்கை

நேபாளத்தின் காத்மாண்டுவில் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க...

கைதிகள் தப்பியோட்டம்!

நேபாளத்தில் நாடு தழுவிய அமைதியின்மைக்கு மத்தியில், நேபாளம் லலித்பூரில் உள்ள நகு...