Date:

இன்றும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசை

இன்றைய தினமும் நாட்டின் பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில் வாகனங்களுடன் சாரதிகள் காத்திருக்கின்றனர்.

 

சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் சுமார் 2 கிலோமீற்றர் தூரத்திற்கு சாரதிகள் காத்திருக்கின்றமையை அவதானிக்க கூடியதாக உள்ளது. அத்துடன் பல பேருந்துகளும் அதில் அடங்குகின்றன.

எவ்வாறாயினும் நேற்று கட்டணம் செலுத்தப்பட்டு விடுவிக்கப்பட்ட 37,300 மெட்ரிக் டன் டீசல் மற்றும் சுப்பர் டீசல் என்பன முத்துராஜவெல எண்ணெய் களஞ்சியசாலையில் தற்போது களஞ்சியப்படுத்தப்படுகிறது.

இதேவேளை புறக்கோட்டை முதல் ஹோமாகம வரை பயணிக்கும் 138 இலக்க பேருந்துகளில் இன்றைய தினம் 12 பேருந்துகள் மாத்திரமே சேவையில் ஈடுபடுவதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

நாளாந்தம் சுமார் 75 பேருந்துகள் சேவையில் ஈடுபடுகின்ற நிலையில் இன்று அந்த எண்ணிக்கை 12ஆக குறைவடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

“சம்பத் மனம்பேரி” குறித்து மற்றுமொரு அதிர்ச்சி தகவல்

கெஹெல்பத்தர பத்மே”வின் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட...

ரமித் ரம்புக்வெல்லவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

சட்டவிரோதமாக 270 மில்லியனுக்கும் அதிக பெறுமதிக் கொண்ட சொத்துக்களை ஈட்டிய விதம்...

அத்துரலியே ரத்தன தேரருக்கு பிணை

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அத்துரலியே ரத்தன தேரரை பிணையில் செல்ல அனுமதித்து நுகேகொடை...

கோபா குழுவின் தலைவராக கபீர் ஹாசிம்ll

பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடருக்கான அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் (கோபா)...