Date:

எரிபொருள் கப்பலைப் பற்றி பேசுவதில் அர்த்தமில்லை-மத்திய வங்கியின் ஆளுநர்

கடைசியாக வருகைத்தந்த எரிபொருள் கப்பல்களுக்கு டொலரை செலுத்துவது பிரச்சினையல்ல எனவும், இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக இலங்கை மத்திய வங்கி சுமார் ஆறு மாதங்களாக அரசாங்கத்திற்கு யோசனைகளை சமர்ப்பித்து வருவதாகவும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்தார்.

அதற்கமைய, மத்திய வங்கி அரசாங்கத்திடம் சமர்ப்பித்த யோசனைகளை நடைமுறைப்படுத்துவதன் ஊடாக புதிய அந்நிய செலாவணியை நாட்டிற்கு வரவழைப்பதற்கும், நாட்டில் தற்போதுள்ள அந்நிய செலாவணி வளங்களைப் பாதுகாப்பதற்கும் உதவும் என மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்தார்.

தற்போதைய நெருக்கடி நிலையானது எரிபொருள் கப்பலுக்கு டொலரை செலுத்துவதற்கான கேள்வி மட்டுமல்ல,” என்று அவர் கூறினார்.

இது ஒரு தொடர் கேள்வி. இந்த கேள்விக்கான பதில் எரிபொருள் கப்பலில் இல்லை. அதற்கு நாம் விடை காண வேண்டும். இது ஒரு ஆழமான கேள்வி. இப்பிரச்னை குறித்து ஆறு மாதங்களாக அரசுக்கு தெரிவித்து தேவையான தீர்வுகளை கேட்டு வருகிறோம். எனவே, கடைசி எரிபொருள் கப்பலைப் பற்றி பேசுவதில் அர்த்தமில்லை, ”என்று அவர் கூறினார்.

இந்த இக்கட்டான காலங்களில் டொலர் தேவைப்பட்டால் டொலரை பெறுவதற்கான வழிமுறைகளை செய்ய வேண்டுமெனவும், அதை விட்டுவிட்டு தன்னால் டொலரை உருவாக்க முடியாது எனவும் மத்திய வங்கியின் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள எரிபொருள் தாங்கியில் இன்று பிற்பகல்...

சட்டமூலத்தை சட்டமாக்கினார் சபாநாயகர்

பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்ட ஜனாதிபதியின் வரப்பிரசாதங்களை (ரத்து செய்தல்) சட்டமூலத்தை சபாநாயகர் கையெழுத்திட்டு...

முஸ்லிம்களின் புதைகுழி அகழ்வுப்பணி அடுத்த மாதம் ஆரம்பம், தேவைப்பட்டால் சர்வதேசத்தின் உதவி பெறப்படும்

மட்டக்களப்பு மாவட்டத்தின் குருக்கள் மடம் கிராமத்தில் படுகொலை செய்யப்பட்ட முஸ்லிம் மக்களின்...

கத்தார் மீதான இஸ்ரேல் தாக்குதலில், உயிரிழந்தவர்கள்:

கட்டார் தலைநகர் தோஹாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 6 பேர்...