இன்று (02) அதிகாலை 5.30 மணியளவில் பேக்கரி உணவுகளை விநியோகித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டியொன்று தீப்பிடித்து எரிந்துள்ளது.
காலி, தல்கம்பொல பிரதேசத்தில் வாகனம் தீப்பிடித்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
தீயினால் முச்சக்கரவண்டியின் பின்பகுதி முற்றாக எரிந்து நாசமானதுடன் அதிலிருந்த பேக்கரி உணவுப் பொருட்களும் எரிந்து நாசமாகியுள்ளன.