தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக எதிர்வரும் நாட்களில் ரயில் சேவைகளும் தடைப்படக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.
ரயில்களை இயக்குவதற்காக மூன்று நாட்களுக்கு மாத்திரம் போதுமான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாகவும்,இதன்காரணமாக சில மட்டுப்படுத்தல்களுடன் தொடருந்து சேவைகளை முன்னெடுக்குமாறு அதிகாரிகளுக்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் ரயில் இயந்திர சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட தெரிவித்துள்ளார்.
உரிய வகையில் எரிபொருள் பெற்றுத் தரப்படும் என கனியவள கூட்டுதாபனமும் அறிவித்துள்ளது.