Date:

இன்றைய தினம் 5 மணித்தியாலத்துக்கும் அதிகநேரம் மின் துண்டிப்பு -விபரம்

நாட்டில் இன்றைய தினம் 5 மணித்தியாலத்துக்கும் அதிகநேரம் மின் துண்டிப்பு மேற்கொள்ளப்பட உள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள மின்சார உற்பத்திக்குத் தேவையான எரிபொருள் பற்றாக்குறை காரணமாக நாட்டில் மின்துண்டிப்பை ஏற்படுத்த இலங்கை மின்சார சபை அனுமதி கோரியமைக்கமைவாக இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அந்தவகையில் இன்றையதினம் பல பகுதிகளிலும் நீண்டநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. நாட்டின் A,B,Cஆகிய வலயங்களுக்கு 4 மணித்தியாலங்களும் 40 நிமிடங்கள் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.

இந்த வலயங்களில் காலை 8.30 முதல், மாலை 4.30 வரையான காலப்பகுதியில் 2 மணித்தியாலமும் 40 நிமிடங்களும் மின் துண்டிக்கப்படும். மின் துண்டிப்பின் எஞ்சிய 2 மணித்தியாலங்கள், மாலை 4.30 முதல் இரவு 10.30 வரையான காலப்பகுதியில் அமுல்படுத்தப்படவுள்ளது.

அதேநேரம், P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட இடங்களில், 5 மணித்தியாலங்களும் 15 நிமிடங்களும் மின்துண்டிப்பு அமுலாகவுள்ளது. இந்த வலயங்களில் காலை 8.30 முதல், மாலை 4.45 வரையான காலப்பகுதியில் 2 மணித்தியாலங்களும் 45 நிமிடங்களும் மின் துண்டிக்கப்படும்.

மின் துண்டிப்பின் எஞ்சிய 2 மணித்தியாலங்களும் 45 நிமிடங்கள், மாலை 4.45 முதல் இரவு 9.45 வரையான காலப்பகுதியில் அமுல்படுத்தப்படவுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அமெரிக்காவிற்கு எதிராக ஈரானுடன் கைகோர்க்கும் பல நாடுகள்…!

ஈரானிய அணுசக்தி நிலையங்களை அமெரிக்கா தாக்கியதைத் தொடர்ந்து ஈரானுக்கு தேவையான அணு...

காலியில் துப்பாக்கிச் சூடு: முதலாளியைச் சுட்ட ஊழியர்!

காலி, அக்மீமன, வெவேகொடவத்த, திசாநாயக்க மாவத்தையில் உள்ள ஒரு வீட்டில் துப்பாக்கிச்...

ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டால் இலங்கைக்கு பாதிப்பா?

ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடுவதால், கச்சா எண்ணெய் பொருட்களை அதிகளவு இறக்குமதி...

ஹோர்முஸ் நீரிணையை மூடுவதற்கு அனுமதி

ஹோர்முஸ் நீரிணையை மூடுவதற்கு ஈரானிய பாராளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் இறுதி...