முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு செல்லும் போது கொவிட்-19 பரிசோதனைகளை மேற்கொள்ளத் தேவையில்லையென சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் உபுல் தர்மதாஸ தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளப்பட்டமைக்கான அட்டையை ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு செல்லும் பயணிகள் வைத்திருத்தல் அவசியமாகும்.
தடுப்பூசியை செலுத்திக் கொள்ளாதவர்கள் 48 மணித்தியாலங்களுக்கு பெறப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை அறிக்கையை வைத்திருத்தல் அவசியமாகும்.
எனினும் முழுமையான கொவிட் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு பி.சி.ஆர் மற்றும் ரெபிட் அண்டிஜன் பரிசோதனைகள் அவசியமில்லை என சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் உபுல் தர்மதாஸ தெரிவித்துள்ளார்.