Date:

இலங்கைக்கான அமெரிக்காவின் தூதுவராக ஜூலி ஜே சேங்க் நியமனம்

இலங்கைக்கான அமெரிக்காவின் அதி சிறப்பு மற்றும் முழு அதிகாரம் கொண்ட தூதுவராக ஜூலி ஜே சேங்க் என்பவரை அமெரிக்கா நியமித்துள்ளது. இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவரான அவர், ஜனாதிபதி மாளிகையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் தனது நியமன சான்றிதழை கையளித்துள்ளார்.

அமெரிக்க வெளிவிவகார சேவையின் மூத்த அதிகாரியான இவர், இந்தோ-பசுபிக் மற்றும் மேற்கு ஆசிய நாடுகளின் ராஜதந்திரியாக கடமையாற்றியுள்ளார்.

இதனை தவிர அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின் உதவி ராஜாங்க செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். ஈராக், கம்போடியா, ஜப்பான், சீனா ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரங்களிலும் கடமையாற்றியுள்ளார்.

1996 ஆம் ஆண்டு அமெரிக்காவின் வெளிவிவகார சேவையில் இணைந்துக்கொண்ட சேங்க், கலிபோர்னியா சான் டியாகோ பல்லைக்கழகத்தில் அரசியல் விஞ்ஞானத்தில் இளங்கலை பட்டத்தை பெற்றுள்ளார்.

மேலும் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் சர்வதேச விவகாரங்களுக்கான முதுகலை பட்டத்தையும் பெற்றுள்ளார். சேங்க, கொரியா, ஜப்பானிய,ஸ்பானிய மற்றும் கெமர் மொழிகளை சரளமாக பேசக் கூடியவர் என இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அங்குனுகொலபலஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட கைதிகள்

மாத்தறை சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையைத் தொடர்ந்து, சுமார் 200 கைதிகள் அங்குனுகொலபலஸ்ஸ...

டான் பிரியசாத்தின் படுகொலை: மூவர் கைது

சமூக ஆர்வலரும் கொலன்னாவை நகரசபை வேட்பாளருமான டான் பிரியசாத்தின் கொலை தொடர்பில்...

சிலாபத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு

சிலாபம் நகரில் அண்மையில் பெய்த மழை காரணமாக சில வீதிகளில் வெள்ளம்(23)...

இத்தாலிக்கு சென்றார் கர்தினால் மல்கம் ரஞ்சித்

எதிர்வரும் 26ஆம் திகதி வத்திக்கானில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் நடைபெறும்...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373