Date:

வத்திகானுக்கு புறப்பட்ட மெல்கம் ரஞ்சித்

கத்தோலிக்க திருச்சபையின் கொழும்பு பேராயர் வணக்கத்திற்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை நேற்று முன்தினம் வத்திகானுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.

பேராயர் தனது இந்த பயணம் தொடர்பாக கத்தோலிக்க திருச்சபையின் உறுப்பினர்களுக்கு தெரிவித்திருந்த போதிலும் பயண திகதி மற்றும் பயணத்தின் கால எல்லை தொடர்பாக அறிவிக்கவில்லை என திருச்சபையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

வருடந்தோறும் பேராயர் வத்திகானுக்கு பயணம் மேற்கொள்ள வழக்கம் எனவும் கோவிட் தொற்று நோய் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகள் பேராயர் வத்திகானுக்கு விஜயம் செய்யவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்த ஆண்டு கட்டாயம் வத்திகானுக்கு விஜயம் செய்ய உள்ளதாக பேராயர் திருச் சபையின் குருக்களுக்கு அறிவித்திருந்தார். எனினும் பயணம் செய்ய போகும் நாள் மற்றும் பயணத்தில் கால எல்லை பற்றி எதனையும் தெரிவிக்கவில்லை.

பாதுகாப்பு காரணங்களுக்காக அவர் இந்த விபரங்களை வெளியிடவில்லை எனவும் அந்த பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். கர்தினால், வருடந்தோறும் ரோமுக்கு விஜயம் செய்து, உலகில் ஏனைய நாடுகளின் கர்தினால்களை சந்தித்து தகவல்களை பரிமாறிக்கொண்டு பேச்சுவார்த்தைகளை நடத்துவதுண்டு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மத்திய வங்கியின் ஆளுநரை சந்தித்த கீதா கோபிநாத்

இலங்கை வந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கீதா...

இஸ்ரேல் மீது பாகிஸ்தான் அணுகுண்டு தாக்குதல் நடத்தும்- திடீர் எச்சரிக்கை விடுத்த ஈரான்!

ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று அமெரிக்க அதிபர்...

அனுரவுக்கே ஜீவன் ஆதரவு

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியால் ஆட்சி அமைக்க...

மூன்று இலட்சத்தை தொடுமா தங்கத்தின் விலை; அதிர்ச்சியில் மக்கள்

இலங்கையில் இன்று 24 கரட் தங்கம் ஒரு பவுண் 269,000 ரூபாவாக...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373