Date:

பல ஆண்களை திருணம் செய்யும் வினோத சட்டம்

தென் ஆப்பிரிக்காவில், பெண்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட ஆண்களை திருமணம் செய்து கொள்ள அனுமதி அளிக்கும் திட்டத்துக்கு, பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு வலுத்து உள்ளது.

உலக அளவில் மிக தாராளமான அரசியலமைப்பு சட்டங்கள் உடைய நாடாக தென் ஆப்பிரிக்கா உள்ளது. இங்கு ஓரின திருமணங்கள், ஒரு ஆண், பல பெண்களை திருமணம் செய்து கொள்வது ஆகியவற்றுக்கு சட்டப்பூர்வமாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருமண விவகாரத்தில் பெண்களுக்கு சம உரிமை அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை, நீண்ட நாட்களாக முன்வைக்கப்பட்டு வருகிறது.

‘ஒரு ஆண், பல பெண்களை திருமணம் செய்து கொள்ள சட்டம் அனுமதிப்பதை போல, ஒரு பெண், பல ஆண்களை மணக்க அனுமதிக்க வேண்டும்’ என, பாலின உரிமை ஆர்வலர்கள் தரப்பில் அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து திருமண சட்டத்தில் சீர்திருத்தம் செய்து, இதற்கு அனுமதி அளிக்க அரசு முடிவு செய்தது.

இந்த புதிய சட்டம் குறித்து அந்நாட்டு பார்லி.,யில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மேலும், இந்த புதிய சட்டம் குறித்து பல்வேறு தரப்பினரின் கருத்தை அரசு கேட்டது. இதற்கு, கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது.’இது ஆப்பிரிக்க கலாசாரத்தை அழித்துவிடும்.

பிறக்கும் குழந்தைகளின் எதிர்காலத்தை பாதிக்கும். ஆணின் இடத்தை பெண்ணுக்கு வழங்க முடியாது’ என, பல்வேறு விதமான கருத்துக்கள் கூறப்பட்டு உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கொழும்பு மாநகர சபையின் வரவு செலவுத் திட்டத்தில் NPP தோல்வி? No

தேசிய மக்கள் சக்தியின் அதிகாரத்திற்குட்பட்ட கொழும்பு மாநகர சபையின் 2026 ஆம்...

நவம்பரில் பணவீக்கத்தில் வீழ்ச்சி!

2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கான இலங்கையின் தேசிய நுகர்வோர் விலைச்...

ஜூலியையும் திரும்ப அழைக்கிறார் டிரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் "அமெரிக்கா முதலில்" நிகழ்ச்சி நிரலுடன் ஒத்துப்போகும்...

NPP எம்.பி தாக்குதல் சம்பவம்: பொலிஸார் வெளியிட்ட அறிக்கை

தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பத்மகுமார உட்பட குழுவினர்...