Date:

ராஜபக்சர்களின் அரசாங்கத்தினால் பெரும்பான்மையினரும் ஏமாற்றம்-தோல்வியுற்றது ராஜபக்ச குடும்பம்

இலங்கையில் ஆட்சி செய்யும் இரண்டாம் ராஜபக்சர்களுக்கு தற்போது பாரிய சவால் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ள இடைவிடாத கஸ்டங்கள், வெளிநாடுகளில் இருந்து பெறப்படும் கடன்கள் மற்றும் வெளிநாட்டு நாணய நெருக்கடி என்பன இரண்டாம் ராஜபக்சர்களின் ஆட்சிக்கு சவாலாக அமைந்துள்ளதாக நாளிதழ் ஒன்று கூறுகிறது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபையினால் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களும் இந்த சவால்களில் அடங்குகின்றன.

இரண்டாம் ராஜபக்ச அரசாங்கத்தினால் சிறுபான்மையினரை மட்டும் வெற்றி கொள்ள முடியவில்லை,

அதேநேரம் பெரும்பான்மையினரின் கணிசமான பிரிவினரும் இந்த அரசாங்கத்தினால் ஏமாற்றமடைந்துள்ளனர்.

இந்தநிலையில் சர்வதேச தொழிலாளர் உடன்படிக்கைகளை புறக்கணித்து அத்தியாவசிய சேவைகளில் தொழிற்சங்க வேலைநிறுத்தங்களை தடை செய்ய வேண்டும் என்று அமைச்சரவை அமைச்சர் ஒருவர் கூறுவதும், அரசியல் எதிரிகள் மற்றும் ஊடக எதிரிகள் தாக்கப்படுவது மற்றும் வெள்ளை வேன் கலாச்சாரத்தை நினைவுகூருவதும், நாட்டிற்குள் அரசாங்கத்தின் மீது அதிருப்தி அலைகளை உருவாக்கி வருகின்றன.

இது, ஏற்கனவே இரண்டாம் ராஜபக்சர்களின் அரசாங்கத்தின் மீது குற்றத்தை சுமத்திக்கொண்டிருக்கும் வெளிநாடுகளுக்கு தீனியாக அமைந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

செம்மணி 3ஆம் கட்ட அகழாய்வு 2026 இல்

செம்மணி மனித புதைகுழிக்குள் மழை நீர் தேங்கி நிற்பதனால் அடுத்த வருடமே...

விரிவுரையாளரின் பாலியல் வன்கொடுமை: சுயாதீன விசாரணை

விரிவுரையாளர் ஒருவர் தனது விடுதியில் மாணவி ஒருவரை தடுத்து வைத்து பாலியல்...

கைதான முன்னாள் சிரேஸ்ட அதிகாரிகளுக்கு பிணை

இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்கழுவினால் கைது செய்யப்பட்டிருந்த இரண்டு முன்னாள் சிரேஸ்ட...

கடல்சார் ஒத்துழைப்புக்கு சவூதியுடன் பேச்சு

கடல்சார் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில் இலங்கைக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையில் பேச்சுவார்த்தை...