Date:

சர்வதேச முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வென்றெடுக்கும் நிலையில் இலங்கை- இ.ம.வங்கி ஆளுநர்

சர்வதேச முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வென்றெடுக்கும் நிலையில் இலங்கை தற்போது இருப்பதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார்.சர்வதேச வர்த்தக தொலைக்காட்சியான ப்ளூம்பெர்க் உடனான உரையாடலில் கலந்து கொண்டு

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

“எங்களின் அனைத்து பத்திர ஏலங்களும் தற்போது நிறைவடைந்துள்ளன. வட்டி விகிதங்கள் நடுத்தர மட்டத்தில் உள்ளன. இந்த ஆண்டு நமது பங்குச் சந்தையின் செயல்திறனைப் பார்த்தால், சமீப காலமாக மிகச் சிறந்த செயல்திறனைக் காட்டி வருகிறது. சுற்றுலா பயணிகள் மீண்டும் நாட்டுக்கு வரத் தொடங்கியுள்ளனர். வங்கித் துறையின் பொதுவான நிபந்தனைகளும் நன்றாகவே உள்ளன. எனவே முதலீட்டாளர்கள் நல்ல நம்பிக்கையுடன் இருக்க முடியும் என்று நினைக்கிறேன்.எனவே,முதலீட்டாளர்களின் நம்பிக்கையைப் பெற நாம் நிறைய செய்ய வேண்டும் என்று நினைக்கவில்லை.

நாங்கள் நமது பொருளாதாரத்தில் சில மாற்றங்களைச் செய்து வருகிறோம். குறிப்பாக நமது எரிபொருள் விலை. தற்போது அரசாங்கம் எரிபொருள் விலையை அதிகரித்தமை குறித்து பேசப்படுகிறது. ஐஎம்எப் வந்தாலும் இந்த மாதிரியான அறிவுரைகள்தான் வழங்கும். இதைத்தான் அரசாங்கம் இப்போது செய்து கொண்டிருக்கிறது.”என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பாகிஸ்தானின் 79வது சுதந்திர தினம்

ஏ.எஸ்.எம்.ஜாவித் . 2025.08.14 பாகிஸ்தானின் சுதந்திரத்தின் 79வது ஆண்டு விழா இன்று இலங்கையில்...

தாய்வானை உலுக்கிய ‘போடூல்’ புயல்

கிழக்கு சீனக்கடலில் உருவான போடூல் புயல் தாய்வானின் கரையைக் கடந்த நிலையில்...

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக போராட்டம்

திருகோணமலையில் விவசாய நிலங்களை தனியார் நிறுவனங்களுக்கு பகிர்ந்தளிப்பதற்கும், அபிவிருத்தி திட்டங்களுக்காக வன...

BOC, ITN உட்பட பல அரச நிறுவனங்களுக்கு புதிய தவிசாளர்கள் நியமனம்

முக்கிய அரச நிறுவனங்களுக்கு நான்கு புதிய தலைவர்களை நியமிப்பது உட்பட பல...