Date:

சர்வதேச முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வென்றெடுக்கும் நிலையில் இலங்கை- இ.ம.வங்கி ஆளுநர்

சர்வதேச முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வென்றெடுக்கும் நிலையில் இலங்கை தற்போது இருப்பதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார்.சர்வதேச வர்த்தக தொலைக்காட்சியான ப்ளூம்பெர்க் உடனான உரையாடலில் கலந்து கொண்டு

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

“எங்களின் அனைத்து பத்திர ஏலங்களும் தற்போது நிறைவடைந்துள்ளன. வட்டி விகிதங்கள் நடுத்தர மட்டத்தில் உள்ளன. இந்த ஆண்டு நமது பங்குச் சந்தையின் செயல்திறனைப் பார்த்தால், சமீப காலமாக மிகச் சிறந்த செயல்திறனைக் காட்டி வருகிறது. சுற்றுலா பயணிகள் மீண்டும் நாட்டுக்கு வரத் தொடங்கியுள்ளனர். வங்கித் துறையின் பொதுவான நிபந்தனைகளும் நன்றாகவே உள்ளன. எனவே முதலீட்டாளர்கள் நல்ல நம்பிக்கையுடன் இருக்க முடியும் என்று நினைக்கிறேன்.எனவே,முதலீட்டாளர்களின் நம்பிக்கையைப் பெற நாம் நிறைய செய்ய வேண்டும் என்று நினைக்கவில்லை.

நாங்கள் நமது பொருளாதாரத்தில் சில மாற்றங்களைச் செய்து வருகிறோம். குறிப்பாக நமது எரிபொருள் விலை. தற்போது அரசாங்கம் எரிபொருள் விலையை அதிகரித்தமை குறித்து பேசப்படுகிறது. ஐஎம்எப் வந்தாலும் இந்த மாதிரியான அறிவுரைகள்தான் வழங்கும். இதைத்தான் அரசாங்கம் இப்போது செய்து கொண்டிருக்கிறது.”என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இன்று சரிந்துள்ள தங்க விலை

கடந்த இரு நாட்களாக தங்க விலையில் மாற்றம் எதுவும் நிகழாத நிலையில்...

6 நாடுகளை வாங்கிய பாலிவுட் நடிகை

கவர்ச்சி நடிகை தீபிகா படுகோனே மெட்டா AI உடன் ஒரு புதிய...

நாளை முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை

2025 ஆம் ஆண்டிற்கான அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார்...

மூன்றாம் தவணை முதலாம் கட்டம் நாளையுடன் நிறைவு!

அரசாங்க மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் முதல்...