Date:

நுகர்வுக்குப் பொருத்தமற்ற நெல் கொள்வனவு; களஞ்சியங்கள் முத்திரையிடப்பட்டுள்ளது.

இரண்டு களஞ்சியங்களுக்காக, நுகர்வுக்குப் பொருத்தமற்ற நெல்லைக் கொள்வனவு செய்தமை தொடர்பில்,நிக்கவரெட்டிய பகுதியில், இரண்டு அதிகாரிகள், பணியிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்னர்.

வடமேல் கமநல சேவை அமைப்பின் பிரதிநிதிகள், இது குறித்து விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு அறியப்படுத்தியதை அடுத்து, உடனடி விசாரணை ஆரம்பிக்கப்பட்டது.

இதற்கமைய, கணக்காய்வு அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில், குறித்த களஞ்சியங்களில் சுமார் 15 இலட்சம் கிலோகிராம் நெல் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதுடன், அதில் 3 இலட்சம் கிலோகிராமுக்கும் அதிகளவான நெல், விலங்கு உணவுக்காக பயன்படுத்துவது என்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதையடுத்து, குறித்த நெல்லைக் கொள்வனவு செய்து களஞ்சியப்படுத்திய வடமேல் பிராந்திய பதில் முகாமையாளரும், அந்தக் களஞ்சியங்களின் உதவிப் பொறுப்பாளரும் இவ்வாறு பணியிலிருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன், குறித்த இரு நெல் களஞ்சியங்ளும், அதிகாரிகளால் முத்திரையிட்டு மூடப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மீண்டும் ஜனாதிபதியாகும் ரணில் விக்கிரமசிங்க..!

வீழ்ச்சியடைந்துள்ள நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கக்கூடிய ஒரே தலைவர் முன்னாள் ஜனாதிபதி ரணில்...

கெஹெலியவுக்கு எதிரான வழக்கு : நீதியரசரிடம் சட்டமா அதிபர் கோரிக்கை

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 12 பேருக்கு எதிராக,...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : ஆணைக்குழு அறிக்கையை ஆராய நால்வரடங்கிய குழு நியமனம்

ஏப்ரல் 21 தாக்குதல் குறித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை ஆராயக்...

தபால் மூல வாக்களிப்புக்கு அலுவலக அடையாள அட்டை ஏற்கப்பட மாட்டது

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பின்போது, ஆள் அடையாளத்தை...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373