Date:

வவுனியாவில் இன்று கால்நடை வளர்ப்பாளர்களுடன் ஒரு சந்திப்பு

இராஜாங்க அமைச்சர் டி.பி.ஹேரத், வவுனியா மற்றும் மன்னார் மாவட்ட கால்நடை வளர்ப்பாளர்களுடன் சந்திப்பொன்றை முன்னெடுத்துள்ளார்.

குறித்த கலந்துரையாடல் வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்றது. இதன்போது குறித்த மாவட்டங்களில் கால்நடை வளர்ப்பாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டதுடன், அதற்கான தீர்வுகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

குறிப்பாக பால்மாவிற்கு பதிலாக திரவப்பாலை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக உற்பத்தி செய்வது தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டதுடன், மேய்ச்சல் தரை தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

வனவள திணைக்களங்களின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை விடுவித்து மேய்ச்சல் நிலங்களாக பயன்படுத்துவது தொடர்பாகவும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டதுடன், கால்நடை வளர்ப்பில் ஈடுபடுபவர்களிற்கு ஊக்குவிப்பு தொகை வழங்குவதற்கும் திட்டங்கள் வகுக்கப்பட்டது.

குறித்த கலந்துரையாடலில் அரச அதிபர்களான ஸ்ரான்லி டிமெல், பி.ஏ.சரத்சந்திர, வடமாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன, கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களங்களின் பணிப்பாளர்கள், கால்நடை வைத்தியர்கள், கால்நடை வளர்ப்பாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஐக்கிய அரபு அமீரகத்தின் இராஜாங்க அமைச்சர் இலங்கை விஜயம்

ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் இராஜாங்க அமைச்சர்...

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் உயிரிழப்பு

இன்று (4) காலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழந்தார். பலப்பிட்டிய...

City of Dreams இன் தீபாவளி கொண்டாட்டத்தை வண்ணமயமாக்கிய நியா சர்மாவின் வருகை

கொழும்பில் உள்ள மிகவும் ஆடம்பரமான NÜWA Sri Lanka-க்கு வருகை தந்த...

இலங்கையின் டிஜிட்டல் கல்வியில் முப்பெரும் சக்திகள்: அரசாங்கம், இளைஞர்கள் மற்றும் சமூக ஊடகங்கள்

இலங்கையின் டிஜிட்டல் கல்விமுறை தற்போது புதிய பரிமாணத்தை அடைந்துள்ளது. இன்றைய கற்றல்...