Date:

வவுனியாவில் இன்று கால்நடை வளர்ப்பாளர்களுடன் ஒரு சந்திப்பு

இராஜாங்க அமைச்சர் டி.பி.ஹேரத், வவுனியா மற்றும் மன்னார் மாவட்ட கால்நடை வளர்ப்பாளர்களுடன் சந்திப்பொன்றை முன்னெடுத்துள்ளார்.

குறித்த கலந்துரையாடல் வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்றது. இதன்போது குறித்த மாவட்டங்களில் கால்நடை வளர்ப்பாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டதுடன், அதற்கான தீர்வுகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

குறிப்பாக பால்மாவிற்கு பதிலாக திரவப்பாலை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக உற்பத்தி செய்வது தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டதுடன், மேய்ச்சல் தரை தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

வனவள திணைக்களங்களின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை விடுவித்து மேய்ச்சல் நிலங்களாக பயன்படுத்துவது தொடர்பாகவும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டதுடன், கால்நடை வளர்ப்பில் ஈடுபடுபவர்களிற்கு ஊக்குவிப்பு தொகை வழங்குவதற்கும் திட்டங்கள் வகுக்கப்பட்டது.

குறித்த கலந்துரையாடலில் அரச அதிபர்களான ஸ்ரான்லி டிமெல், பி.ஏ.சரத்சந்திர, வடமாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன, கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களங்களின் பணிப்பாளர்கள், கால்நடை வைத்தியர்கள், கால்நடை வளர்ப்பாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அனைத்து தபால் ஊழியர்களின் விடுமுறை ரத்து

அனைத்து தபால் ஊழியர்களினதும் விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. நாளை (17) முதல் அனைத்து...

நாட்டில் இருந்து 20 சதவீத பொறியியலாளர்கள் வௌியேற்றம்

கடந்த சில ஆண்டுகளாக இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்களில் சுமார் 20...

பொலிஸ் விசேட சுற்றிவளைப்பில் மேலும் பலர் கைது

கடந்த 24 மணித்தியாலத்தில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட தேடுதல்...

தபால் ஊழியர்கள் நாளை முதல் பணிப்புறக்கணிப்பில்

தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் மற்றும் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க...