Date:

போலி தேசிய அடையாள அட்டையை பயன்படுத்தி பரீட்சை எழுத வந்திருந்த தேரர் கைது

போலி தேசிய அடையாள அட்டையை பயன்படுத்தி கொக்மாதுவ, வெலிகம பிரதேசத்தில் தேரர் ஒருவருக்காக , 2021ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர் தரப் பரீட்சை எழுத வந்திருந்ததாக தெரிவிக்கப்படும், இன்னுமொரு தேரர் புத்தளம் சாந்த மரியா தமிழ் வித்தியாலயத்தியத்திலுள்ள பரீட்சை நிலையத்தில் வைத்து சந்தேகத்தின் அடிப்படையில் இன்று கைதுசெய்யப்பட்டதாக புத்தளம் பொலிஸாா் தெரிவித்துள்ளனா்.

புத்தளம் சாந்த மரியா தமிழ் வித்தியத்திலுள்ள பரீட்சை நிலையத்தில் நான்காவது நாளாக க.பொ.த. உயர் தரப் பரீட்சை சிங்கள பாடத்துக்காக இரண்டாம் பிரிவு வினாத்தாளுக்கு விடை எழுதுவதற்காக வருகை தந்திருந்த குறித்த தேரர் தொடர்பில் ஏற்பட்ட சந்தேகத்தில் அடிப்படையில் அவர் பரீட்சை நிலைய தலைவரினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளாா்.

இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள தேரரை புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதுடன் புத்தளம் பொலிஸாா் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனா்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பாலஸ்தீனத்தை பாதுகாப்பதற்கான தேசிய இயக்கம் இலங்கையில் ஆரம்பம்

இரு அரசு தீர்வை செயல்படுத்துவது உட்பட, பாலஸ்தீனியர்களைப் பாதுகாக்க உள்நாட்டிலும் சர்வதேச...

யானையிடம் இருந்து தப்பிய 3 வயது குழந்தை

மட்டக்களப்பு, ஆயித்தியமலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மகிழவெட்டுவான் பகுதியில் யானைத் தாக்குதலில் 35...

இணைய சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 இந்தியர்கள் கைது

தலங்கம, அக்குரேகொட பகுதியில் இணைய சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 இந்தியர்கள் நேற்று...

ட்ரம்பின் மிரட்டலுக்கு இந்தியா பதிலடி

ரஷ்யாவில் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியாவுக்கு கூடுதல்...