Date:

கொவிட் தொற்றுநோய்க்குப் பின்னர் இலங்கையின் ஆடைத் தொழில் உலக சந்தையில் மீள் எழுச்சியை இலக்காகக் கொள்ள வேண்டும்

கோவிட் தொற்றுநோய்க்குப் பிந்தைய காலத்தில் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான ஆடை உற்பத்தியாளர்களால் உலகளாவிய சந்தையில் உருவாகி வரும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள இலங்கை தனது ஆடை உற்பத்தி திறனை விரிவுபடுத்துவதற்கு உதவுமாறு அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டிலுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான ஆடை உற்பத்தியாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை ஆடை ஏற்றுமதியாளர் மன்றத்தின் (SLCGE) அண்மையில் நடைபெற்ற 26ஆவது வருடாந்த பொதுக் கூட்டத்தில் இந்தக் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. Hilton Colombo Residencyல் நடைபெற்ற இந்த நிகழ்வில் 2022/23ஆம் ஆண்டிற்கான தலைவராக Rainbow Clothingன் முகாமைத்துவ பணிப்பாளர் பந்துல பெர்னாண்டோ மீண்டும் தெரிவு செய்யப்பட்டார். இந்நிகழ்வில் பிரதம அதிதியாக வர்த்தக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன கலந்து கொண்டதுடன், மேலும் இந்த நிகழ்விற்கு கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவங்ச, பத்திக், கைத்தறி துணிகள் மற்றும் உள்நாட்டு ஆடை உற்பத்தி இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர, ஆகிய அமைச்சர்களும் ஒன்றிணைந்த ஆடைத் தொழிற்சாலை சங்கங்களின் மன்றத்தின் (JAAF) தலைவரான ஏ. சுகுமாரன் மற்றும் கொமர்ஷல் வங்கியின் பிரதான செயற்பாட்டு அதிகாரி சனத் மனதுங்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.

தற்போதைய தொற்றுநோயின் விளைவாக உலகளாவிய ஆடை சந்தை கணிசமாக மாறிவிட்டது. குறிப்பாக e-commerceக்கு பிரதிபலிக்கும் வகையில் நமது உத்திகளை வகுக்க வேண்டும். அரசாங்க அதிகாரிகள் மற்றும் நன்கொடையாளர்கள் உட்பட பிற பங்குதாரர்களுடன் சேர்ந்து, இந்த மாற்றங்களை நிவர்த்தி செய்வதற்கான திட்டங்களை நாங்கள் தொடங்கினோம்.” என SLCGEஇன் தலைவர் பந்துல பெர்னாண்டோ இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் தெரிவித்தார். சந்தையில் நிலவும் அமெரிக்க-சீன வர்த்தகப் போர் இலங்கை ஆடை உற்பத்தியாளர்களுக்கு அதிக வாய்ப்புகளை உருவாக்கி வருவதாகவும், இவற்றைப் பயன்படுத்திக் கொள்ள உற்பத்தியாளர்களுக்கு அரசாங்க ஆதரவு தேவை எனவும் இந்த நிகழ்வின் போது சுட்டிக்காட்டப்பட்டது.

எங்கள் உறுப்பினர்களின் தொழிற்சாலைகளின் விரிவாக்கத்திற்கு நிலம் ஒதுக்கீடு செய்வதில் நாங்கள் அதிகாரிகளுடன் ஒத்துழைக்கிறோம். அவற்றின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டியது அவசியம். இருப்பினும், முதலாளிகளுடன் கலந்தாலோசிக்காமல் பல்வேறு தொழிலாளர் விதிமுறைகளை தற்காலிகமாக அறிமுகப்படுத்துவதும் திருத்துவதும் கவலையை ஏற்படுத்தி வணிக நம்பிக்கையை குறைமதிப்பிற்கு உட்படுத்தும்.” என SLCGE பொதுச் செயலாளர் ஹேமந்த பெரேரா தெரிவித்தார். உதாரணமாக, கட்டாய ஓய்வு பெறும் வயதை அறிமுகப்படுத்துதல் மற்றும் தொழிலாளர்களை பணிநீக்கம் செய்யும் சட்டத்தின் திருத்தம் ஆகியவையும் இதில் அடங்கும்.

சிறிய மற்றும் நடுத்தர அளவிலான ஆடை உற்பத்தியாளர்கள், உற்பத்தி வசதிகளில் COVID-19 பரவுவதற்கு சில தரப்பினரைக் குற்றம் சாட்டியுள்ளனர், மேலும் COVID-19ஐத் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் முதலாளிகள் செயல்படுத்தியுள்ளனர் என்று கூறினார். தொற்றுநோய் பரவிய காலங்களின் போது ஆடைத் தொழில்துறைக்கு வழங்கிய விலைமதிப்பற்ற ஆதரவிற்காக முப்படைகள், அரசாங்கம் மற்றும் பிற பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் இலங்கை ஆடைத் துறையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உயர்மட்ட அமைப்பான JAAF ஆகியவற்றிற்கு மன்றம் தனது நன்றியைத் தெரிவித்தது.

2022/23 SLCGEஇன் புதிய பணிப்பாளர் சபையாக தலைவர் பந்துல பெர்னாண்டோ, பொருளாளர் ஹேமந்த பெரேரா, பிரதித் தலைவர் ரந்த திசேரா, உதவிப் பொதுச் செயலாளர் நிஷாந்த பக்மிகே, உதவிப் பொருளாளராக ருமேஸ் பெரேரா, மெனுகா குணவர்தன ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பலஸ்தீன் மக்களின் உரிமைகளுக்காக முன் நிற்போம்

திசைகாட்டி அரசாங்கத்தின் தேர்தல் விஞ்ஞாபன வாக்குறுதிகள் இன்று வெறும் புஸ்வாணமாகிவிட்டன என எதிர்க்கட்சித்...

சமூக ஊடகங்களில் பரவிவரும் சிறி தலதா வழிபாட்டு புகைப்படம் குறித்து விசாரணை

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் நடைபெற்று வரும் 'சிறி தலதா வழிப்பாட்டு'...

ஈஸ்டர் ஞாயிறு தின தாக்குதல் தொடர்பான அறிக்கை சி.ஐ.டியிடம் ஒப்படைப்பு

ஈஸ்டர் ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373