“மலையக மக்களின் அபிலாசைகளை உள்ளடக்கி பல்வேறு தரப்பினருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ள கடிதம் இந்த மாதம் 22 ஆம் திகதி தனது தலைமையில் கொழும்பில் சந்தித்து, இந்த கடிதத்தை முடிவு செய்யும் நடவடிக்கை எடுக்கப்படும்” என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.
இந்த கடிதம் இந்தியப் பிரதமர், பிரித்தானிய அரசாங்கம் உள்ளிட்ட தரப்புக்கு அனுப்பப்படுவதுடன், இலங்கையின் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சகல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அனுப்பி வைக்கப்படும் என்று மனோ கணேசன் குறிப்பிட்டார்.