நீண்ட நாட்களுக்கு பின்னர் நேற்று வியாழக்கிழமை தேர்தல் முறை சீர்திருத்த குழு இடம்பெற்றது. இதில் கலந்து கொண்ட தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன்,
“மாகாணசபை தேர்தல் சட்டத்தை திருத்தி, பழைய விகிதாசார முறையில் தேர்தலை நடத்தும்படியான யோசனையை அரசுக்கு முன் வைக்க எமது கூட்டணி தீர்மானித்துள்ளது.
அத்தோடு, உள்ளூராட்சி தேர்தல் முறையிலும் சில சீர்திருத்தங்களை செயற்படுத்தவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி எதிர்வரும் 22ம் திகதி அடுத்த கூட்டம் நடைபெறும்போது, இவை குறித்து ஆய்வு செய்து முடிவுகள் எடுக்கப்படும்” என தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.