Date:

இலங்கையில் கைதான தமிழக மீனவர்கள் 9 பேர் நாடு திரும்பினர்

இன்றைய தினம் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட 9 தமிழக மீனவர்கள் சென்னை விமான நிலையத்தை சென்றடைந்துள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரகம் தமது உத்தியோகப்பூர்வ டிவிட்டர் கணக்கில் தெரிவித்துள்ளது.

“மீனவர்கள் தங்கள் பாரம்பரிய கடல் பகுதியில் மீன்பிடிக்க ஏற்றதொரு நல்ல மாற்றம் ஏற்படும் என எதிர்ப்பார்த்திருந்தேன்.

துரதிஷ்டவசமாக, தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் நடவடிக்கைகள் இதுவரை குறைவதற்கான அறிகுறிகள் ஏதும் தென்படவில்லை.

இது நமது மீனவர்களின் வாழ்வாதார பிரச்சினை மட்டுமின்றி, கடலில் தமிழக மீனவர்களின் உயிருக்கு அச்சுறுத்தலுடன், பாரம்பரிய கடல் பகுதியில் மீன் பிடிக்கும் அவர்களது உரிமைக்கு சவால் விடுவது போன்றதாகும்.

எனவே, இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு,இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 29 தமிழக மீனவர்களையும், அவர்களது 79 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என இந்திய பிரதமர் நரேந்திர மோடியை, வலியுறுத்தி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அங்குனுகொலபலஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட கைதிகள்

மாத்தறை சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையைத் தொடர்ந்து, சுமார் 200 கைதிகள் அங்குனுகொலபலஸ்ஸ...

டான் பிரியசாத்தின் படுகொலை: மூவர் கைது

சமூக ஆர்வலரும் கொலன்னாவை நகரசபை வேட்பாளருமான டான் பிரியசாத்தின் கொலை தொடர்பில்...

சிலாபத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு

சிலாபம் நகரில் அண்மையில் பெய்த மழை காரணமாக சில வீதிகளில் வெள்ளம்(23)...

இத்தாலிக்கு சென்றார் கர்தினால் மல்கம் ரஞ்சித்

எதிர்வரும் 26ஆம் திகதி வத்திக்கானில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் நடைபெறும்...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373