Date:

மருந்து தட்டுப்பாட்டிற்கு விரைவில் தீர்வு?

நாட்டில் மருந்து தட்டுப்பாட்டைத் தடுப்பதற்கு தேவையான ஒழுங்குமுறை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மருந்து உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குமுறைக்கான இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போதுள்ள மருந்துகளின் தேவையை கருத்திற் கொண்டு குறிப்பிட்ட கால அவகாசத்தின் அடிப்படையில் மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அதன் செயலாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதன்படி, மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு டொலர்களின் தேவை குறித்து மத்திய வங்கியின் ஆளுநர் மற்றும் திறைசேரி செயலாளருக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முன்னைய அறிவிப்புகளின்படி, மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு மத்திய வங்கி 7 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது என இராஜாங்க அமைச்சின் செயலாளர் கலாநிதி சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலைமையை சமாளித்து மருந்து தட்டுப்பாட்டை குறைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ரத்நாயக்க மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பியூமியின் மகன் கைது

ராஜகிரியவின் கலபலுவாவ பகுதியில் ஒருவரைத் தாக்கியதாக வெலிக்கடை பொலிஸாரால் பியூமி ஹன்சமாலியின்...

செவ்வந்தியின் தாய் மரணம்

பாதாள உலகத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் சந்தேக...

கெஹலியவுக்கு எதிரான ஆவணங்களை அச்சிட ரூ.1.5 மில்லியன் செலவு

போலி இம்யூனோகுளோபுலின் குப்பிகளை இறக்குமதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட 12 பேருக்கு...

ட்ரம்பின் தீர்வை வரி: சஜித் அதிரடி அறிவிப்பு

எமது நாட்டு ஏற்றுமதிகளில் 26.4% பங்களிப்பைப் பெற்றுத் தரும் ஏற்றுமதி தலமாக...