சொகுசு வாகனத்தில் கஞ்சா கடத்திய இளம் ஜோடி கைது!

கஞ்சா கடத்திய இளம் ஜோடியை ஆரச்சிகட்டுவ பொலிஸார் கைது செய்து உள்ளனர்.

புத்தளம் சிலாபம் வீதியின் பத்துளு ஓய பொலிஸ் வீதித் தடையில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் இருந்து சுமார் 17 கிலோ கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது.

26 வயதுடைய ஆண் ஒருவரும் 22 வயதுடைய பெண் ஒருவருமே இவ்வாறு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் ராஜாங்கனை பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர்கள் என தெரியவந்துள்ளது.

கஞ்சா செடிகள் தனமல்வில பிரதேசத்தில் செய்கை பண்ணப்பட்டவை என பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

ஐ.சி.சி. ஜூலை மாத சிறந்த வீராங்கனை விருதுக்கு ஹர்ஷிதா சமரவிக்கிரம

ஜூலை மாதத்துக்கான ஐ.சி.சியின் சிறந்த வீராங்கனை விருதுக்கான போட்டியாளர்கள் பட்டியலில் இலங்கை அணியின் ஹர்ஷிதா சமரவிக்கிரம இடம்பெற்றுள்ளார். ஒவ்வொரு மாதமும் சிறப்பாகச் செயல்படும் வீரர்,...

பெற்றோல், விமான எரிபொருள் மற்றும் டீசல் கொள்முதலுக்கு அமைச்சரவை ஒப்புதல்

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு பெற்றோல் 92 Unl, விமான வகை டீசல் எண்ணெய் மற்றும் டீசல் (0.05% M.S) ஆகியவற்றை நீண்டகால ஒப்பந்தங்களின்...