Date:

தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை தலைர் பதவி விலகல்?

தெங்கு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பதவியில் இருந்து கீர்த்தி ஸ்ரீ வீரசிங்க விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர் இன்றைய தினத்திற்குள் தமது பதவி விலகல் கடிதத்தினை கையளிப்பாரென எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

ராகம மருத்துவ பீட மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு பின்னர், ஜனாதிபதி அலுவலகத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய, தெங்கு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பதவியில் இருந்து விலகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, தென்னை, கித்துல், பனை செய்கைகள் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ தமது பதவியில் இருந்து விலகியிருந்தார்.

மருத்துவ பீட மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோவின் மகன் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.

இது குறித்த விசாரணைகள் நிறைவுறும் வரையில், தமது பதவியில் இருந்து விலகுவதாக இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ அறிவித்திருந்தார்.

மருத்துவ பீட மாணவர்களை தாக்கிய சந்தேகநபர்கள், தென்னை, கித்துல், பனை செய்கைகள் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சுக்கு சொந்தமான வாகனம் ஒன்றில் பிரவேசித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளவுள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்

வைத்தியர்களின் மேலதிக நேர கொடுப்பனவு திருத்தங்கள் தொடர்பான சுற்றறிக்கை உடனடியாக வெளியிடப்படாவிட்டால்...

Breaking நாங்கள் இராணுவ இலக்குகளை மட்டுமே தாக்கினோம் ,இனி பொருளாதார இலக்குகள் தாக்கப்படும்-ஈரான்

வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி கூறுகையில், ஈரானின் தாக்குதல்கள் தொடரும்: முதல் இரவில்,...

“முஹம்மத்திடமிருந்து கற்க வேண்டும்”

நமது நாடு பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ள இத்தருணத்தில், நாட்டிற்கு அபிவிருத்தியும் சேவைகளும்...

ஈரானுடன் கூட்டு சேர்ந்து இஸ்ரேலை தாக்கும் ஹவுதி படை

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஏமன் நாட்டின்...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373