Date:

தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை தலைர் பதவி விலகல்?

தெங்கு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பதவியில் இருந்து கீர்த்தி ஸ்ரீ வீரசிங்க விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர் இன்றைய தினத்திற்குள் தமது பதவி விலகல் கடிதத்தினை கையளிப்பாரென எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

ராகம மருத்துவ பீட மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு பின்னர், ஜனாதிபதி அலுவலகத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய, தெங்கு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பதவியில் இருந்து விலகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, தென்னை, கித்துல், பனை செய்கைகள் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ தமது பதவியில் இருந்து விலகியிருந்தார்.

மருத்துவ பீட மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோவின் மகன் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.

இது குறித்த விசாரணைகள் நிறைவுறும் வரையில், தமது பதவியில் இருந்து விலகுவதாக இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ அறிவித்திருந்தார்.

மருத்துவ பீட மாணவர்களை தாக்கிய சந்தேகநபர்கள், தென்னை, கித்துல், பனை செய்கைகள் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சுக்கு சொந்தமான வாகனம் ஒன்றில் பிரவேசித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள எரிபொருள் தாங்கியில் இன்று பிற்பகல்...

சட்டமூலத்தை சட்டமாக்கினார் சபாநாயகர்

பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்ட ஜனாதிபதியின் வரப்பிரசாதங்களை (ரத்து செய்தல்) சட்டமூலத்தை சபாநாயகர் கையெழுத்திட்டு...

முஸ்லிம்களின் புதைகுழி அகழ்வுப்பணி அடுத்த மாதம் ஆரம்பம், தேவைப்பட்டால் சர்வதேசத்தின் உதவி பெறப்படும்

மட்டக்களப்பு மாவட்டத்தின் குருக்கள் மடம் கிராமத்தில் படுகொலை செய்யப்பட்ட முஸ்லிம் மக்களின்...

கத்தார் மீதான இஸ்ரேல் தாக்குதலில், உயிரிழந்தவர்கள்:

கட்டார் தலைநகர் தோஹாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 6 பேர்...