Date:

யாழ்.நெடுந்தீவில் அறநெறி பாடசாலை அடிக்கல் நாட்டு விழா

யாழ்.நெடுந்தீவு செல்லம்மாள் வித்தியாலய வளாகத்தில் சிவன் மானுட மேம்பாட்டு நிறுவனத்தின் ஏற்பாட்டில் செல்லம்மாள் ஞாபகார்த்த அறநெறி பாடசாலை மற்றும் செல்லம்மாள் ஞாபகார்த்த முன்பள்ளி ஆகியவற்றிற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று இடம்பெற்றது.

இதில் சிறப்பு அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றிய போது வேலன் சுவாமிகள் “மனிதப் பண்பியல்புகளோடு ஆளுமையுள்ள ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்க வேண்டிய தூர நோக்கில் அறநெறிப் பாடசாலைகள் அமைந்துள்ளன” என்று தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

இன்று நமது மண்ணிலேயே சிறுவர்களை இளம் சந்ததியினரை நல்ல வழியில் ஆன்மீக ரீதியில் வழிகாட்டி வளர்த்தெடுக்க வேண்டிய பொறுப்பில் அனைவரும் இருக்கின்றோம்.

எமது பண்பாடு, கலை, கலாச்சார விழுமியங்களைப் பேணக்கூடிய விதத்தில் மனித பண்பியலோடு ஆளுமையுள்ள ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்க வேண்டிய தூர நோக்கில் இந்த அறநெறிப் பாடசாலைகள் முக்கிய பாகங்களை வகிக்கின்றன என அவர் தெரிவித்துள்ளார்.

சிவன் மானுட மேம்பாட்டு நிறுவனத்தின் ஏற்பாட்டில் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சிவன் மானுட மேம்பாட்டு நிறுவனத்தின் நிறுவனத்தைச் சேர்ந்த கலியுகவரதன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், நெடுந்தீவு பிரதேச செயலாளர் சத்திய சோதி வேலன்சுவாமி, ஓய்வு நிலை விரிவுரையாளரும் இந்துமகா சபையைச் சேர்ந்தவரும் கவிஞருமான சோ. பத்மநாதன் மற்றும் சிவன் மானுட மேம்பாட்டு நிறுவனத்தினர் பொதுமக்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.

??????

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

எல்லயில் விபத்திற்குள்ளான பேருந்தின் உரிமையாளர் கைது

எல்ல - வெல்வாய வீதியில் விபத்துக்குள்ளான பேருந்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த...

நேபாள நிலைமை தொடர்பில் ரணில் விசேட அறிக்கை

நேபாளத்தின் காத்மாண்டுவில் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க...

கைதிகள் தப்பியோட்டம்!

நேபாளத்தில் நாடு தழுவிய அமைதியின்மைக்கு மத்தியில், நேபாளம் லலித்பூரில் உள்ள நகு...

சபாநாயகருக்கு எதிராகவும் நம்பிக்கையில்லா பிரேரணை?

சபாநாயகருக்கு எதிராகவும் நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக ஐக்கிய...