5, 000 ரூபா கொடுப்பனவை பிரிவெனா ஆசிரியர்கள், அரச அனுமதிபெற்ற தனியார் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் அரச அனுமதிபெற்ற விசேட தேவை பாடசாலைகளின் ஆசிரியர்களுக்காக வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அதிபர் – ஆசிரியர் சம்பள குறைபாடுகளை நீக்குதல் தொடர்பான தீர்மானத்திற்கமைய வெளியிடப்பட்டுள்ள பொது நிர்வாக சுற்றறிக்கை இல 03/2016 (IV) இல் மேற்குறிப்பிட்ட ஆசிரியர்களும் உள்ளடக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.