தமிழ் சினிமாவின் மாபெரும் உச்ச நட்சத்திரம் நடிகர் விஜய். இவர் தற்போது பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார்.
நடிகர் விஜய் தனது படங்களில் தொடர்ந்து பல சமூக கருத்துக்களை எடுத்து பேசியுள்ளார். அதனால் ஏற்பட்ட பல பிரச்சனைகளையும் சந்தித்துள்ளார் என்பதை நாம் அறிவோம்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா சினிமா 100 ஆண்டுகளை கடந்ததை கொண்டாடும் விதமாக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் மாபெரும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இதில் இந்திய சினிமா நட்சத்திரங்கள் பலரும் கலந்துகொண்டனர். குறிப்பாக தமிழ் சினிமாவில் இருந்து ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா, விக்ரம் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
இதில் முன்னணி நட்சத்திரங்கள் பலரும், முன் வரிசையில் அமர்ந்திருக்க, நடிகர் விஜய்யை மட்டும் கடைசி வரிசையில் அமர வைத்தனர். இதற்கு அப்போது நடந்த சில பிரச்சனைகள் தான் காரணம் என்று கூறப்படுகிறது.
முன் வரிசையில் அணைத்து பிரபலங்களும் அமர்ந்திருக்க, விஜய்யை மட்டும் பின் வரிசையில் அமர வைத்தது, விஜய் ரசிகர்களை கோபத்தின் உச்சிக்கே கொண்டு சென்றது.
தனியாக அமர்ந்திருக்கும் விஜய்யை, முன்னணி நட்சத்திரங்கள் பலரும் கண்டுகொள்ளாமல் இருந்தும், நடிகர் விக்ரம் மட்டுமே விஜய்யை பார்த்தவுடன் விஜய்யுடன் இணைந்து பின் வரிசையில் வந்த அமர்ந்தார்.
இந்த நிகழ்வை இன்று வரை நடிகர் விஜய்யின் ரசிகர்களால் மறக்கவே முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.