Date:

எரிபொருளை விரயமாக்கி அரச நிகழ்வுகளை நடத்துவது தவறு- கம்மன்பில

நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணம் கொவிட் தொற்று நோய் என அரசாங்கத்தில் இருக்கும் பலர் கூறுவது பொய் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில  தெரிவித்துள்ளார். சிங்கள வானொலி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார்.

இலங்கை வரலாற்றில் என்றுமே எதிர்நோக்காத நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது. பலர் இந்த நெருக்கடியை அடையாளம் காணவில்லை. நெருக்கடியை அடையாளம் காணாது அதற்கு தீர்வு காண முடியாது.

கொவிட் காரணமாக ஏற்பட்ட நெருக்கடி என பலர் கூறுகின்றனர். இது உலக நெருக்கடி என்கின்றனர். இது பொய். இலங்கை வரையறைகள் இன்றி கடனை பெற்றதே இந்த நெருக்கடிக்கு காரணம்.

நாம் வரலாறு முழுவதும் கடனை பெற்று செலவிட்ட இனம். உழைத்து செலவிடுவதற்கு பதிலாக கடனை பெற்று செலவிடும் கலாசாரத்தை நாம் 1950 ஆம் ஆண்டில் இருந்து முன்னெடுத்து வருகின்றோம்.

தற்போது மேலதிக கடனை பெற முடியாத அளவுக்கு கடன் பொறியில் சிக்கியுள்ளோம். இந்த நெருக்கடி முழு நாட்டு மக்களும் சிக்கியுள்ளனர். இதனால், அதிகமாக பயிரிடுங்கள். உருவாக்கங்களுக்கான உந்துலை ஏற்படுத்த வேண்டும்.

இந்த முன்னுதாரணத்தை பேச்சில் அல்ல அரசியல் தலைவர்கள் செயலில் காட்ட வேண்டும். பெருந்தொகையான எரிபொருளை விரயமாக்கி சுதந்திர தின வைபவம் போன்ற அரச நிகழ்வுகளை நடத்துவது தவறு. அப்படியான வைபவங்களை நடத்த வேண்டாம் என நான் அமைச்சரவையில் கோரினேன்.

எனினும் அதனை கவனத்தில் கொள்ளவில்லை எனவும் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

தொப்பி அணிந்து தாடி வளர்த்தால் பயங்கரவாதி, மொட்டை அடித்து தாடியை எடுத்தால் அகிம்சைவாதியா!

தொப்பி அணிந்து தாடிவளர்த்தால் பயங்கரவாதி, மொட்டை அடித்து தாடியை எடுத்தால் அவர்கள்...

50000 இளைஞர்களுக்கு “Next Sri Lanka” திட்டத்தில் வேலைவாய்ப்பு!

கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம், பிற அமைச்சகங்களுடன் இணைந்து, 200,000 குறைந்த வருமானம்...

தங்கம் விலை பவுணுக்கு 4,000 ரூபாய் அதிகரித்தது

கடந்த இரு நாட்களுடன் ஒப்பிடுகையில், இன்று (12) தங்க விலை 4,000...

வவுனியாவில் ஏற்பட்ட பதற்றம் : 5 பொலிஸ் அதிகாரிகளுக்கு காயம்

வவுனியா - கூமாங்குளம் பகுதியில் நேற்று (11) இரவு பொலிஸாருக்கும் பிரதேச...