கொழும்பில் இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத், “கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தால் பாரிய அபாயத்தை எதிர்கொள்ள நேரிடும். எனவே ஆரம்ப கட்டத்திலேயே தொற்றாளர் எண்ணிக்கையை குறைந்த மட்டத்தில் பேணக் கூடியதாக இருந்தால் இவ்வாறான அபாயங்களை எதிர்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்படாது என குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை,ஒமிக்ரோன் தொற்றால் ஏற்படக் கூடிய பாதிப்புக்கள் தற்போது குறைவாகக் காணப்பட்டாலும் எதிர்காலத்தில் அந்த நிலைமை மாற்றமடையக் கூடும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.