Date:

பசிலின் வார்த்தையால் நாட்டின் நற்பெயருக்கு ஆபத்து – வஜிர அபேவர்தன

இலங்கையில் போர் நடைபெற்ற காலத்தில் கறுப்பு பணத்தை பயன்படுத்தி, வடகொரியாவிடம் இருந்து ஆயுதங்களை கொள்வனவு செய்ததாக நிதியமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ள விடயம், நாட்டின் நற்பெயருக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன  தெரிவித்துள்ளார்.

வடகொரியாவிடம் இருந்து ஆயுதங்கள் கொள்வனவு செய்யப்பட்டிருக்குமாயின் அது பற்றிய கணக்கீட்டு விபரங்கள் இருக்கின்றதா என்பதை வெளிப்படுத்த வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். எது எவ்வாறு இருப்பினும் இப்படியான கருத்துக்கள் மூலம் சர்வதேச ரீதியில் நாட்டின் நற்பெயருக்கும், புகழுக்குமே பாதிப்பு ஏற்படும்.

இந்த தகவல் வெளியீட்டு காரணமாக சர்வதேச நாணய நிதியம் உட்பட சர்வதேச அமைப்புகளிடம் இருந்து உதவிகளை பெறுவதில் இலங்கைக்கு சிக்கல்கள் ஏற்படும்.

அத்துடன் மிக விரைவில் இலங்கையை பொருளாதார ரீதியிலான தரப்படுத்தலில் கீழ் மேலும் நோக்கி நகர்த்தி வங்குரோத்து அடைந்து விட்ட நாடுகளின் பட்டியல் சேர்க்கும் ஆபத்து இருக்கின்றது எனவும் வஜிர அபேவர்தன குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

செம்மணி 3ஆம் கட்ட அகழாய்வு 2026 இல்

செம்மணி மனித புதைகுழிக்குள் மழை நீர் தேங்கி நிற்பதனால் அடுத்த வருடமே...

விரிவுரையாளரின் பாலியல் வன்கொடுமை: சுயாதீன விசாரணை

விரிவுரையாளர் ஒருவர் தனது விடுதியில் மாணவி ஒருவரை தடுத்து வைத்து பாலியல்...

கைதான முன்னாள் சிரேஸ்ட அதிகாரிகளுக்கு பிணை

இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்கழுவினால் கைது செய்யப்பட்டிருந்த இரண்டு முன்னாள் சிரேஸ்ட...

கடல்சார் ஒத்துழைப்புக்கு சவூதியுடன் பேச்சு

கடல்சார் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில் இலங்கைக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையில் பேச்சுவார்த்தை...