Date:

விமல் வீரவன்ச வழக்கிற்கு சமூகமளிக்கவில்லை

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க முன்னிலையில் அமைச்சர் விமல் வீரவன்சவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட சட்டவிரோதமான வருமானம் தொடர்பான வழக்கிற்கு விமல் வீரவன்சவை பிரதிநிதித்துவம் செய்யும் சட்டத்தரணி மன்றில் சமூகமளிக்கவில்லை.

கடந்த 2010ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கத்தில் அமைச்சராக பதவி வகித்த காலப் பகுதியில் 75 மில்லியன் ரூபா வரை சட்டவிரோதமான முறையில் வருமானம் பெற்றமை மற்றும் சொத்து சேர்த்தமை தொடர்பில் இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அவருக்கு சுகயீனம் காரணமாகவே மன்றிற்கு சமூகமளிக்காத நிலையில், இந்த வழக்கை எதிர்வரும் ஜுன் மாதம் 17ம் திகதிக்கு நீதிபதி ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.

முறைப்பாட்டாளரின் இரண்டாவது, மூன்றாவது, நான்காவது மற்றும் ஐந்தாவது சாட்சிகளையும் எதிர்வரும் ஜூன் மாதம் 17ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மீண்டும் இலங்கையில் பரவும் கொடிய நோய்

இலங்கையில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 5 பேருக்கு மலேரியா நோய்...

கென்யாவில் இடம்பெற்ற விமான விபத்தில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்

கென்யா, நைரோபியில் உள்ள வில்சன் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட Amref Flying...

காசா நகரத்தை முழுமையாக கைப்பற்றும் நெதன்யாகுவின் திட்டத்திற்கு ஒப்புதல்

காசா நகரத்தை முழுமையாக கைப்பற்றும் நெதன்யாகுவின் திட்டத்திற்கு ஒப்புதல் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவை,...

பொரளை துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

பொரளை, சஹஸ்புரவில் உள்ள சிறிசர உயன அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்திற்கு அருகில்...