பிலியந்தலையில் இருந்து மத்தேகொட நோக்கி லொறி பயணித்த போது பிரேக் செயலிழந்ததன் காரணமாக மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டி மற்றும் கார் ஆகியவற்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவரும் முச்சக்கரவண்டியின் சாரதியும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த விபத்தினால் கடைக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளார்.
லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், கஹதுடுவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்