களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையத்தில், இன்றைய தினத்திற்கு மாத்திரம் மின்னுற்பத்தி செய்வதற்கான டீசல் கையிருப்பில் உள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், அடுத்துவரும் நாட்களுக்கு அவசியமான டீசலைப் பெற்றுக்கொள்வதற்கு இன்று நடவடிக்கை எடுக்கப்படுவதாக அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தில், செயலிழந்த மூன்றாவது மின்பிறப்பாக்கி சீரமைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது தேசிய மின் கட்டமைப்புக்கு 100 மெகாவோட் வலுகொண்ட மின்சாரம் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.