ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கடுமையான தீர்மானங்களை எதிர்பார்ப்பதாகவும், அவர் மென்மையாக நடந்து கொள்கின்றார் எனவும், என நீதி அமைச்சர்,ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் பேசுகையில், “பொருளாதார கேந்திர நிலையங்களான துறைமுகம், நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை, பெற்றோலியக் கூட்டுத்தபானம், இலங்கை மின்சாரசபை, அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் உள்ளிட்ட அனைத்தும் தொழிற்சங்கப் போராட்டம் நடாத்துவதனை தடை செய்ய வேண்டும்.போராட்டம் நடாத்தினால் அந்த சேவையை வழங்குவதற்கான துரித படையணி ஒன்றை ஆயத்த நிலையில் வைத்திருக்க வேண்டும்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை திட்டமிட்ட அடிப்படையில் நாச வேலைகளில் ஈடுபடும் தரப்புகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.






