வகுப்பறையொன்றில், கொவிட் தொற்று உறுதியான மாணவரிடமிருந்து, சக மாணவர்கள், ஒரு மீற்றர் இடைவெளியை பேணி, முகக்கவசம் அணிந்து, முகத்திற்கு நேராக தொடர்பாடல் வைத்துக் கொள்ளாமல் இருந்தால் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக வேண்டிய அவசியமில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், கோவிட் தொற்றாளர் ஒருவரின் நெருங்கிய தொடர்பிலிருந்த, கோவிட் தடுப்பூசியை பெற்றிராத மாணவர்கள் மட்டுமே கட்டாயமாக தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் சுகாதார அமைச்சின் புதிய சுகாதார வழிகாட்டலில் குறிப்பிடப்பட்டுள்ளது.