Date:

டெர்மினல் லிமிட்டெட் நிறுவனத்தின் பணிப்பாளர்-வலுசக்தி அமைச்சர் சந்திப்பு

திருகோணமலை எண்ணெய் தாங்கி வளாகத்தில் உள்ள 61 எண்ணெய் தாங்கிகளை நிர்வகிக்கும் ட்ரிங்கோ பெற்றோலியம் டெர்மினல் லிமிட்டெட் நிறுவனத்தின் பணிப்பாளர் சபை மற்றும் வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு இடையில் கடந்த (25) ஆம் திகதி சந்திப்பொன்று இடம்பெற்றது.

வலுசக்தி அமைச்சின் செயலாளர் கே. டி. ஆர். ஒல்காவும் கலந்துகொண்ட இந்த சந்திப்பில் நிறுவனத்தின் புதிய திட்டங்கள் மற்றும் அதன் கடமை, பொறுப்புகள் பற்றி கலந்துரையாடப்பட்டது.

புதிய நிறுவனத்தின் தலைவர் பதவியை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சட்டத்தரணி சுமித் விஜேசிங்க வகிப்பதுடன், சட்டத்தரணி பூபதி கஹதுடுவ, பொறியியலாளர் தம்மிக்க மல்லிகாராச்சி ஆகியோர் அந்நிறுவனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்களாக பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், மனோஜ் குப்தா, அசீம் பார்கவா மற்றும் ராஜேஷ் பகத் ஆகியோர் புதிய நிறுவனத்தின் பணிப்பாளர்களாக லங்கா இந்தியன் ஒயில் (லங்கா ஐஓசி) நிறுவனத்தால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ட்ரிங்கோ பெற்றோலியம் டெர்மினல்ஸ் நிறுவனமானது, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு 51% பங்குகள் உரித்துடைய, பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் நிர்வகிக்கப்படும் துணை நிறுவனமாக செயற்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பலஸ்தீன் மக்களின் உரிமைகளுக்காக முன் நிற்போம்

திசைகாட்டி அரசாங்கத்தின் தேர்தல் விஞ்ஞாபன வாக்குறுதிகள் இன்று வெறும் புஸ்வாணமாகிவிட்டன என எதிர்க்கட்சித்...

சமூக ஊடகங்களில் பரவிவரும் சிறி தலதா வழிபாட்டு புகைப்படம் குறித்து விசாரணை

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் நடைபெற்று வரும் 'சிறி தலதா வழிப்பாட்டு'...

ஈஸ்டர் ஞாயிறு தின தாக்குதல் தொடர்பான அறிக்கை சி.ஐ.டியிடம் ஒப்படைப்பு

ஈஸ்டர் ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373