Date:

தெஹிவளை மிருக்காட்சிசாலையிலுள்ள சிங்கத்துக்கு கொரோனா

தெஹிவளை மிருக்காட்சிசாலையிலுள்ள சிங்கமொன்றுக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது பிசிஆர் பரிசோதனைமூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என நம்பத்தகுந்த வட்டாரங்களை மேற்கோள்காட்டி சிங்கள நாளிதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

2012 ஆம் ஆண்டில் தென்கொரியாவில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட ஆண் சிங்கமொன்றுக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது. இதனையடுத்து சிங்கக்கூட்டுக்கு அருகில் பராமரிப்பாளர்களாக இருந்த மூவர் அவர்களின் வீடுகளுக்குள்ளேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இவ்விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள வனஜீவராசிகள் இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க,

” சிங்கமொன்று சுகயீனமுற்றிருப்பது உண்மைதான். மிருகங்களுக்கு நடத்தப்படும் பிசிஆர் பரிசோதனை முடிவு உரிய தகவலை தராத சூழ்நிலையும் காணப்படுகின்றது. எனவே ,இவ்விவகாரம் தொடர்பில் இந்தியாவுடன் கலந்துரையாடி உரிய பரிசோதனையை மேற்கொள்ளுமாறு மிருக்ககாட்சி சாலையின் பணிப்பாளர் குழுவுக்கு கட்டளையிட்டுள்ளேன்.” – என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஆணுறுப்பை காட்டிய பொகவந்தலாவ குடும்பஸ்தருக்கு விளக்கமறியல்

தனது ஆணுறுப்பை காண்பித்த பொகவந்தலாவ பிரதேசத்தைச் சேர்ந்த குடும்பஸ்தரைஎதிர்வரும் 28ஆம் திகதி...

கைதான அநுர வல்பொலவிற்கு பிணை

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட புவிச்சரிதவியல்...

ஷேக் ஹசீனாவிற்கு மரண தண்டனை விதிப்பு

இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான வங்காளதேசத்தில் கடந்த ஆண்டு நடந்த போராட்டத்தில்...

Breaking: மக்காவுக்கு புனித பயணம் மேற்கொண்டிருந்த 42 இந்தியர்கள் உயிரிழப்பு!

தெலுங்கானாவில் இருந்து மக்காவுக்கு புனித பயணம் மேற்கொண்டவர்கள் இவ்வாறு விபத்தில் உயிரிழந்துள்ளனர் இந்த...