“பொதுமக்கள் முழுமையாக ஒத்துழைப்பை வழங்கினால் நாட்டை மீண்டும் முடக்காமல் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியும். அதற்கு சுகாதார நடைமுறைகளை முறையே பின்பற்ற வேண்டும்.”என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
“நாட்டில் கொரோனா சிகிச்சை நிலையங்களில் 6 ஆயிரத்து 25 கட்டில்கள் தற்போது பயன்படுத்தப்படுகின்றன. எதிர்காலத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் அதனைச் சமாளிக்கக்கூடிய வளம் உள்ளது.வைத்தியசாலைகளில் இடப்பற்றாக்குறை மற்றும் ஒட்சிசன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என வெளியாகும் கருத்துக்கள் போலியானவை.
வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தப் பொறுப்புடன் செயற்பட வேண்டும். ஏற்கனவே நாடு முடக்கப்பட்டதால் ஏற்பட்ட பொருளாதாரத் தாக்கங்கள் இன்னும் நெருக்கடிகளை ஏற்படுத்திக் கொண்டே இருக்கின்றன” என மேலும் அவர் குறிப்பிட்டுள்ளார்.