Date:

எரிபொருள் கையிருப்பு முடிந்தது-மின்சார சபை

மின் உற்பத்திக்கு தேவையான டீசல் மற்றும் எரிபொருள் கையிருப்பு இன்று மட்டுமே இருப்பதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்திற்கு வழங்கப்பட்ட டீசல் இன்றுடன் காலாவதியாகும் என இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் அன்ட்ரூ நவமுனி தெரிவித்துள்ளார்.

சபுகஸ்கந்த மற்றும் கொழும்பு துறைமுக மிதக்கும் மின் உற்பத்தி நிலையங்களில் இன்றையதினம் மாத்திரமே எரிபொருள் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அதன்படி இன்று டீசல் மற்றும் எரிபொருள் கிடைக்காவிட்டால் மின்சாரத்தை துண்டிக்க நேரிடும் எனவும் அவர் கூறுகிறார்.

இதேவேளை, எதிர்வரும் 27ம் திகதி வரை மின்வெட்டுக்கான அவசியம் கிடையாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மின்வெட்டு தொடர்பில் இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட யோசனையை, மீண்டும் 27ம் திகதி பரிசீலிக்க போவதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

எவ்வாயினும், எதிர்வரும் 3 நாட்களுக்கு மின்சார உற்பத்திக்கு தேவையான எரிபொருள் கைவசம் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ராஜபக்சர்களின் குடும்பத்தில் விரைவில் கைதாகவுள்ள முக்கிய நபர்

முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச மற்றும் கோட்டாபய ராஜபக்ச அரசாங்கங்களின் போது...

மட்டக்குளியில் ஆயுதங்களுடன் ஒருவர் கைது

மட்டக்குளிய சமித் பகுதியில் T-56 துப்பாக்கியை வைத்திருந்த மட்டக்குளியவைச் சேர்ந்த 36...

நாளை முதல் சில பகுதிகளுக்கு இலவசமாக வழங்கப்படவுள்ள ரயில் சேவைகள்

பொசன் பண்டிகையை முன்னிட்டு ரயில் திணைக்களம் விசேட ரயில் சேவைகளை இயக்கவுள்ளதாக...

அதிகரிக்கப்படும் சீமெந்து மூட்டையின் விலை?

50 கிலோ சீமெந்து மூட்டையின் விலையை அதிகரிக்க சீமெந்து நிறுவனங்கள் தீர்மானித்துள்ளதாக...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373