நாடாளுமன்ற வளாகத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 43 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த வாரம் முதல் இன்று வரை பத்துக்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல், நாடாளுமன்றத்திலுள்ள பல வைத்தியர்கள் உட்பட சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பல ஊழியர்களுக்கும் கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.