Date:

உள்நாட்டு தேங்காய் எண்ணெய்யும் சுத்திகரிக்கப்படுவது கட்டாயமாக்கப்படும்

எதிர்வரும் காலங்களில் உள்நாட்டில் தயாரிக்கப்படும் தேங்காய் எண்ணெய்யும் சுத்திகரிக்கப்படுவது கட்டாயமாக்கப்படும் என தெங்கு அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.

சிலர் வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரும் தேங்காய் எண்ணெய் தொடர்பில் போலியான விடயங்களை முன்வைத்தமையால் சந்தையில் தேங்காய் எண்ணெய்க்கான தட்டுப்பாடு ஏற்படுவதாக தெங்கு அபிவிருத்தி சபையின் தலைவர் கீர்த்தி வீரசிங்க தெரிவித்தார்.

அத்துடன் தேங்காய் எண்ணெய்யின் விலை அதிகரிப்பதாகவும் அவர் சுட்டிகாட்டினார்.

தற்போது சந்தையில் ஒரு போத்தல் தேங்காய் எண்ணெய் 700 ரூபாவரையில் அதிகரித்துள்ளதாகவும் எதிர்வரும் காலங்களில் தேங்காய் எண்ணெய்க்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படக்கூடும் எனவும் தெங்கு அபிவிருத்தி சபையின் தலைவர் கீர்த்தி வீரசிங்க தெரிவித்தார்.

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய் உரிய தரத்துடன் இல்லை என அகில இலங்கை பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் முன்னதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ரஷ்யாவில் இரகசியச் சிகிச்சை? ஈரானின் புதிய தலைவர் கடிதம்!

யுத்த மோதல்களுக்கு மத்தியில் மறைந்திருக்கும் ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா...

ஈரானின் கார்க் தீவை கைப்பற்றும் சாத்தியம் உள்ளது – ட்ரம்ப்

ஈரானின் எண்ணெயைக் கைப்பற்ற முடியும் என்றும், அந்நாட்டின் பிரதான எரிபொருள் மையமான...

நீர் வெட்டு அமுல் தொடர்பில் வௌியான தகவல்

நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று...

குவைட்டில் ஏவுகணை தாக்குதல்: இந்தியர் உயிரிழப்பு

இஸ்ரேல், அமெரிக்கா - ஈரானுக்கு இடையிலான போர் அதிகரித்து வரும் நிலையில்,...