Date:

மின்வெட்டு தொடர்பில் மக்களைக் குழப்ப வேண்டாம் – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

மின்வெட்டு தொடர்பாக அறிவிக்கவோ அல்லது மின் துண்டிப்பை மேற்கொள்ளவோ தொழிற்சங்கங்களுக்கு அதிகாரம் இல்லை என்று பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் ஜெயநாத் ஹேரத் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று(24) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.

தொழிற்சங்கங்களுக்கு அதன் உறுப்பினர்களின் உரிமைகள் தொடர்பான செயற்பாடுகளில் ஈடுபடும் அதிகாரமே உள்ளது.

மின்சாரத்தைத் துண்டிப்பதா, இல்லையா என்பதைத் தீர்மானிக்கின்ற அதிகாரம், சட்ட ரீதியாக பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவிற்கே உள்ளது.

நாளாந்தம் மின்சார துண்டிப்பு தொடர்பாக வெவ்வேறு வகையான அறிவிப்புகள் வெளியாக்கப்பட்டு மக்கள் குழப்பியடிக்கப்படுகிறார்கள். இதனைத் தவிர்க்க வேண்டும்.

பொதுமக்களும் பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ அறிவிப்பு வரும்வரையில் காத்திருக்க வேண்டும்.

தற்போது இருக்கின்ற நிலைமையில் மின் துண்டிப்பை ஏற்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்றே கருதப்படுகிறது.

காரணம் மின்சார உற்பத்திக்கான எரிபொருட்களை வழங்குவதற்கு போதுமான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இலங்கை மின்சார சபை, எரிபொருள் கூட்டுத்தாபனத்துக்கு வழங்க வேண்டிய கடன் தொகையைச் செலுத்தி முடிப்பதற்கான உத்தரவு திறைசேரிக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.

எனவே எதிர்காலத்தில் மின்சாரத்தைத் துண்டிக்க வேண்டிய நிலை ஏற்படாது.

எவ்வாறாயினும் நிலைமைகளை ஆராய்ந்து, மின்சாரத்தைத் துண்டிக்க வேண்டுமா, தேவையில்லையா என்பது தொடர்பாக நாளை நண்பகலுக்கு முன்னதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Breaking சமாதான முன்மொழிவை ஈரான் உத்தியோகபூர்வமாக நிராகரிப்பு

போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக அமெரிக்கா முன்வைத்த சமாதான முன்மொழிவை ஈரான்...

அமெரிக்காவிற்கு ஈரான் கொடுத்த பதில்!

அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்ட போர்நிறுத்தக் கோரிக்கைகள் மற்றும் நிபந்தனைகளை ஈரான் உத்தியோகபூர்வமாக நிராகரித்துள்ளது.   திணிக்கப்பட்டுள்ள...

சுரேஷ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி

தடுப்புக் காவலில் உள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ்...

நிதியியல் உலகில் பரபரப்பு : 150 டொலராக அதிகரிக்கப்போகும் எண்ணெய் விலை? : பிளாக்ராக் நிறுவனம் அதிரடி

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் பதற்றங்கள் காரணமாக மசகு எண்ணெய்...