Date:

மெனிங் சந்தையில் மரக்கறிகளின் விலைகள் அதிகரிப்பு!

பேலியகொடை மெனிங் சந்தையில் மரக்கறிகளின் விலைகள் கடந்த நாட்களை விட மீண்டும் அதிகரித்துள்ளது.

மலையகத்தில் இருந்து வரும் மரக்கறிகளின் அளவில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளமையே இந்த விலை அதிகரிப்புக்கு காரணம் என வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

பதுளை உட்பட பல மரக்கறி பயிரிடும் பிரதேசங்களில் உரம் கிடைக்காத காரணத்தினால் விவசாயிகள் தற்போது பயிர்ச்செய்கையில் இருந்து விலகியுள்ளனர்.

இதன் காரணமாக கொழும்பில் மரக்கறிகளுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பேலியகொடை மெனிங் வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இவ்வாறானதொரு பின்னணியில் இன்று (24) மீண்டும் மரக்கறி விலைகள் அதிகரித்துள்ளன.

இதற்கிடையில், போதிய பூச்சிக்கொல்லிகள் மற்றும் களைக்கொல்லிகள் இல்லாததால், நெல் மற்றும் பிற பயிர்ச் செய்கைகளில் ஈடுபடும் விவசாயிகள் தொடர்ந்தும் பாதிக்கப்படுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நியூயோர்க் நகரத்தின் முதல் முஸ்லிம் மேயர் தெரிவு

நியூயோர்க் நகரத்தின் வரலாற்றில், முதல் முஸ்லிம் மேயராக ஸோஹ்ரான் மாம்டானி தெரிவு...

பிலிப்பைன்சை தாக்கிய சூறாவளி; 60க்கு மேற்பட்டோர் பலி

ஆசியாவில் அமைந்துள்ள தீவு நாடு பிலிப்பைன்ஸ். இந்நாட்டை நேற்று கல்மேகி என்ற...

சரித்த ரத்வத்தே பிணையில் விடுதலை

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் மூத்த ஆலோசகராக இருந்த காலத்தில், உரிய...

ஐக்கிய அரபு அமீரகத்தின் இராஜாங்க அமைச்சர் இலங்கை விஜயம்

ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் இராஜாங்க அமைச்சர்...