Date:

மெனிங் சந்தையில் மரக்கறிகளின் விலைகள் அதிகரிப்பு!

பேலியகொடை மெனிங் சந்தையில் மரக்கறிகளின் விலைகள் கடந்த நாட்களை விட மீண்டும் அதிகரித்துள்ளது.

மலையகத்தில் இருந்து வரும் மரக்கறிகளின் அளவில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளமையே இந்த விலை அதிகரிப்புக்கு காரணம் என வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

பதுளை உட்பட பல மரக்கறி பயிரிடும் பிரதேசங்களில் உரம் கிடைக்காத காரணத்தினால் விவசாயிகள் தற்போது பயிர்ச்செய்கையில் இருந்து விலகியுள்ளனர்.

இதன் காரணமாக கொழும்பில் மரக்கறிகளுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பேலியகொடை மெனிங் வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இவ்வாறானதொரு பின்னணியில் இன்று (24) மீண்டும் மரக்கறி விலைகள் அதிகரித்துள்ளன.

இதற்கிடையில், போதிய பூச்சிக்கொல்லிகள் மற்றும் களைக்கொல்லிகள் இல்லாததால், நெல் மற்றும் பிற பயிர்ச் செய்கைகளில் ஈடுபடும் விவசாயிகள் தொடர்ந்தும் பாதிக்கப்படுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பாராளுமன்றம்,பிரதமர், அமைச்சரின் வீடுகளை போராட்டக்காரர்கள் கொளுத்தினர்

நேபாளத்தில் அரசுக்கு எதிரான போராட்டம் இரண்டாவது நாளாக நீடித்து வரும் நிலையில்,...

நேபாளத்தில் சமூக ஊடகங்களின் மீதான தடை வாபஸ்

பேஸ்​புக், யூ டியூப், எக்ஸ் உள்​ளிட்ட சமூக வலை​தளங்​களுக்கு நேபாள அரசு...

ஜனாதிபதி வரப்பிரசாதம் (ரத்து) சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்றின் தீர்மானம்

ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை ரத்து செய்வதற்கான சட்டமூலத்தின் எந்தவொரு சரத்தும் அரசியலமைப்பின் எந்தவொரு...

17வது ஆசிய கிண்ணத் தொடர் இன்று ஆரம்பம்

17வது ஆசிய கிண்ணத் தொடர் இன்று (09) ஆரம்பமாகின்றது. தொடரின் ஆரம்ப ஆட்டத்தில்...