“உலக சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் விலை 89 டொலர்கள்.ஏழு ஆண்டுகளின் இவ்வாறு விலை உயர்வு பதிவாகியுள்ளது.ஒரு லீற்றர் டீசலில் அரசாங்கத்திற்கு 30 ரூபா நட்டம் ஏற்படுகின்றது.மாதமொன்றுக்கு எரிபொருள் கொள்வனவு செய்ய 500 மில்லியன் டொலர் தேவைப்படும்.அதேவேளை, ஏற்றுமதி வருமானம் 750 டொலர்களாக காணப்படுகின்றது எனவும் நாட்டு மக்கள் இந்த நிலைமைகளை புரிந்து கொள்ள வேண்டும்” எனவும் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
எரிபொருட்களின் விலைகள் உயர்த்தப்படாது.மக்கள் எரிபொருட்களை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்
“நன்றாக சாப்பிட்டு, குடித்து விட்டு உணவை விரயமாக்கி அவற்றை குப்பை கூடையில் வீசிக் கொண்டே மக்களிடம் சிக்கனமாக இருக்குமாறு கோரினால் அது மக்களுக்கு கோபம் வரும், எனவே சிக்கனம் என்பது அரசியல்வாதிகளிடமிருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும்” என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.