Date:

2021ம் ஆண்டின் புலமை பரிசில் பரீட்சை நாளை

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடத்தப்படவிருந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை, கொவிட் வைரஸ் பரவல் காரணமாக பல முறை ஒத்திவைக்கப்பட்டு நாளை நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன தெரிவித்துள்ளார்.

சிங்கள மொழி மூலத்தினூடாக 255,062 பேரும், தமிழ் மொழி மூலத்தினூடாக 85,445 பேரும் பரீட்சைக்கு தோற்றுகின்றனர்..

கொவிட் தொற்றுக்குள்ளான பிள்ளைகள் அருகில் உள்ள பரீட்சை நிலையத்திற்குச் சென்று பிசீஆர் அல்லது ரெபிட்அன்டிஜன் பரிசோதனை அறிக்கையை சமர்ப்பித்து விசேட நிலையத்தில் பரீட்சை எழுத முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

அதேவேளை தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் அறிகுறிகளைக்கொண்ட மாணவர்களுக்கு அந்தந்த மையங்களில் ஒரு சிறப்பு அறை அமைக்கப்பட்டுள்ளது. அங்கு அவர்கள் தேர்வுக்கு முகம்கொடுக்க முடியும்.

பெற்றோர்கள் உட்பட மாணவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிதல், கைகளை கழுவுதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்ற சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இன்று சரிந்துள்ள தங்க விலை

கடந்த இரு நாட்களாக தங்க விலையில் மாற்றம் எதுவும் நிகழாத நிலையில்...

6 நாடுகளை வாங்கிய பாலிவுட் நடிகை

கவர்ச்சி நடிகை தீபிகா படுகோனே மெட்டா AI உடன் ஒரு புதிய...

நாளை முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை

2025 ஆம் ஆண்டிற்கான அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார்...

மூன்றாம் தவணை முதலாம் கட்டம் நாளையுடன் நிறைவு!

அரசாங்க மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் முதல்...