கோட்டாபய ராஜபக்ச ஆட்சியிலேயே அதிகளவில் கடன் பெறப்பட்டுள்ளது. நாட்டின் மொத்த கடன் 21 ட்ரில்லியன் ரூபாயில் 8 ட்ரில்லியன் ரூபாய் கடன் கோட்டாபயவின் ஆட்சிக்காலத்திலேயே பெறப்பட்டுள்ளது. ஆனாலும் தனது இரண்டாண்டு ஆட்சிக்காலத்தில் எவ்வித கடனும் பெறவில்லை என ஜனாதிபதி கூறியுள்ளார்.
கடனுக்கு சாப்பிடுவது , விற்று சாப்பிடுவதே அரசாங்கத்தின் கொள்கை எனவும் சோறு வழங்கிய தந்தையாக சீனாவின் ஜனாதிபதி ஷீ ஜின்னை மக்கள் கூற வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது எனவும் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.