தமது ட்விட்டர் பதிவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனுக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளதாகவும் தம்மை தனிமைப்படுத்திக்கொள்ள நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சில நாட்களாக தம்முடன் தொடர்பைப் பேணியவர்கள், ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால், பரிசோதனை மேற்கொள்ளுமாறும் மேலும் அவர் தெரிவித்துள்ளார்.